ஜோதிட செய்தி: 27.09.2014

Saturday 27 September 2014
ஜோதிட செய்தி: 27.09.2014






1. ஐந்தில் சனி அல்லது சுக்ரன் அல்லது ராகு இருப்பின் அதிக பெண் குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு.

2. குரு உச்சம் பெற்று சந்திரனை பார்த்தால் ஜாதகர் நீண்ட ஆயுள் உடையவர், நல்ல உடல் வாகு உடையவராயிருப்பார்.

3. லக்னத்திற்க்கு பன்னிரண்டில் குரு இருப்பின் ஜாதகருக்கு காதல் மற்றும் கட்டாயத் திருமணம் நடைபெற வாய்ப்புண்டு.

4. ஏழில் செவ்வாயும் குருவும் சேர்ந்து இருந்து அசுபர் பார்வை இல்லாது இருப்பின் அந்த ஜாதகிக்கு கௌரவமான பதவியில் உள்ள கணவர் கிடைப்பார்.

5. ஏழில் சனியுடன் (சூரியன் இல்லாது) புதன் அல்லது சுக்ரன் இணைந்து இருப்பின் திருப்தியற்ற மண வாழ்க்கை.

6. எவர் ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் - ஏழாம் வீட்டில் தனியாக இருக்கிறாரோ, அவர்கள் திருமணம் ஒரு கேள்விக்குறியாகி விடுகிறது. திருமணம் நடந்தாலும், அது எப்படி , எவ்வளவு இடையூறுகளுக்கு இடையில் நடந்தது என்பது , அந்த ஜாதர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.

7. ராகு, சூரியன் மற்றும் சனி ஆறாம் இடத்துடன் சம்பந்தப்படால் அந்த ஜாதகருக்கு தாய் மாமன் உறவு பாதிக்கும்.

8. ஆறில் சனி கெட்டால் ஜீரண கோளாறு இருக்கும். இதனால் அந்த ஜாதகர் அதிகம் சாப்பிடுவார்.

9. குரு பார்வை இல்லாது ராகு/கேது ஒன்று/ஐந்து/ஒன்பதில் இருந்து லக்னாபதியும் பலம்  இல்லாவிட்டால் வேற்று மதங்களில் மனம் செல்லும் வாய்ப்பு உண்டு.



தகவல் அளித்தவர்,

திரு சோமசுந்தரம் அவர்கள்,
மதுரை.

0 comments:

Post a Comment