விஷம் தீண்டி மரணம்
பிறப்பும் இறப்பும்
மானுட வாழ்வில் தவிர்க்கமுடியாதது. இதன் இடைப்பட்ட காலமே வாழ்க்கை. வாழ்க்கையின் அர்த்தம்
புரியாமலேயே வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
உலகில் பிறக்கும்
அனைத்து உயிரினங்களும் ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும். ஆசனங்கள் மற்றும் சில பயிற்ச்சிகள்
மூலம் வாழ்நாளை நீட்டிக்கமுடியுமே தவிர இறப்பை தவிர்க்கமுடியாது.
மூப்பு எய்தி இறப்பவர்கள்
பாதிபேர் எனில், தற்பொழுது துர்மரணம் எய்துவோர் எண்ணிக்கைதான் அதிகம். விஞ்ஞான வளர்ச்சி
என்கிறபேரில் வாகனங்கள் எமனாக இருக்கிறகாலம் இது.
இதுபோலவே விஷஜந்துக்களால்
உயிர் இழப்பவர்கள் சிலபேர். மொத்தத்தில் இறப்பு எப்படி நம்மை தீண்டும் என்று நமது ஜாதகம்
மூலம் அறியலாம். ஒருவர் விஷஜந்துக்களால் கடிபட்டு உயிர் இழப்பாரா என்பதை ஜாதகம் மூலம்
அறியலாம்.
அதாவது ஜனன ஜாதகத்தில்
8ம் இல்லத்தில் செவ்வாய் இருந்து ,சூரியனோடு பாம்பும் சேர்ந்து நின்றால் அச்சாதகன் விஷம்
தீண்டி மரணம் எய்துவான்.