புதையல் யாருக்கு?

Friday 21 November 2014
புதையல் யாருக்கு?


பணம், பணம், பணம் .எங்கு பார்த்தாலும் பணம். எதற்கெடுத்தாலும் பணம். மனிதன் தனது உண்மையான தேடலை விடுத்து எப்பொழுதும் நிலையில்லாது இருக்கும் பணத்தின் மீதே ஆர்வம் போகின்றது.

இதில் குறைகூற ஒன்றும் இல்லை, ஏனெனில் பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். பணம் இல்லாவிட்டால் ஏன் சமூகத்திற்க்கு போக வேண்டும்! வீட்டில் கூட மரியாதை இருக்காது.

இப்படிப்பட்ட இன்றியமையாத பணத்தை அடைய அனைவரும் உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். பெற்றோரை விடுத்து, கட்டிய மனைவியை பிரிந்து, பெற்ற பிள்ளையின் முகத்தை வருடக்கணக்கில் காணாமல் பணத்தின் பின்னே ஓடி ஓடி சம்பாரிக்கின்றனர்.

பலபேர் இரவும் பகலுமாக உளைத்தும் போதிய வருமானம் இல்லாமல் இருக்கின்றனர். சிலருக்கோ ஒன்றும் செய்யாமலே பணம் தானாக தேடி வரும். உதாரணமாக புதையலோ அல்லது வேறு மறைமுக வழியிலோ வந்து சேரும். இப்படி நோகாமல் பணம் கிடைப்பதற்க்கும் ஜாதகத்தில்  அமைப்பு வேண்டும்.

அதாவது ஜனன ஜாதகத்தில் ராகு லக்னத்திற்க்கு 6 ம் இடத்திலும், கேது 12 ம் இடத்திலும், தேவகுரு கேந்திரத்தில் நின்றால் அந்த ஜாதகனுக்கு புதையல் கிட்டும். அதாவது எதிர்பாராமல் பணம் அல்லது பொன்னோ நிச்சயம் வந்து சேரும்.

காலம் முழுவதும் கஷ்டபடுவோர் இருக்கையில் ,சிலருக்கு இப்படியும் அதிர்ஷ்டம் அடிக்கும். எல்லாம் அவரவர்கள் வாங்கிவந்த வரம்.

சில பொன்மொழிகள்:

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.
-ஸ்மித்.

பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்
- ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்.
-வீப்பர்.


மிகுந்த தனம் கொண்ட ஜாதகன்

Friday 7 November 2014
மிகுந்த தனம் கொண்ட ஜாதகன்


கூறினேன் கலைமதியும் ஒன்றில் நிற்க

குருவெள்ளி தேர்ப்பாகன் ஆரேழெட்டில்

மாரினேன் மற்றோர்கள் மூன்றுபத்து

மைந்தனே லாபத்தி லமர நன்று

சீரினேன் செம்பொன்னும் கோடியுண்டு

சிவசிவா சீர்பெருகும் செல்வமுள்ளோன்

தேரினேன் காலாள்கள் மெத்தவுண்டு

திடமாகப் புலிப்பாணி தெரிவித்தேனே.

இன்னுமொன்று இலக்கினத்தில் பூர்ண கலையுள்ள சந்திரன் நிற்க, குரு, சுக்கிரன், புதன் ஆகியோர் முறையே 6,7,8, ஆகிய இடங்களில் நிற்க மற்றையோர் 3,10,11 ஆகிய இடங்களில் அமர்ந்திருப்பின் அச்சாதகன் நன்மையான பலன்களையே அடைகிறான். சிறந்த செம்பொன் கோடி கோடியாய் அவனுக்கு வாய்க்கும். சிவபரம் பொருளின் பேரருட் கருணையால் செல்வச்சீர் பெருகிப் காணும். மிகத் தனவந்தனான அவன் தேர்ப்படையுடன் காலாட்படையும் மெத்தவுடையன் என்று போகமா முனிவரின் அருளாணை பெற்ற புலிப்பாணி கூறினேன்.


நாடாளும் மன்னன்

நாடாளும் மன்னன்


பாடினேன் நின்னமொன்று பகரக்கேளு

படவரவு பரமகுரு சேர்ந்துநிற்க

கூடினேன் குளிர்ந்தமதி அருகில் நிற்கக்

கொற்றவனே குவலயமும் ஆளும்வல்லன்

தேடினேன் தேர்வீரர் கோடாகோடி

திடமுள்ள துரகங்கள் ரதங்கள்மெத்த

நாடினேன் போகருட கடாட்சத்தாலே

நாடெல்லா மாளுமன்னன் நயந்துபாரே.

மேலும் ஒன்றையும் நான் பாடுகிறேன். கேட்பாயாக! பாம்பும் குருவும் குளிர்ச்சி மிக்க சந்திரன் அருகில் நிற்க ஒரு மனையில் இருப்பின் அச்சாதகன் இக்குவலயம் ஆளும் மன்னனே ஆவான். கோடானு கோடி தேர் வீரர்களுடன் நல்ல ஆஜானுபாகுவான குதிரைகளையும் (குதிரைப் படையையும்) மற்றும் ரதங்களையும் உடைய வெற்றி வீரன் என்று போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி கூறினேன்.
 

ஐசுவரியம் நிறைந்த ஜாதகன்

ஐசுவரியம் நிறைந்த ஜாதகன்


பாரப்பா மேடமுதல் கடகம்மற்றும்

பகருகின்ற கிரகங்கள் ளிருவராக

ஆரப்பா அகங்கள் தனி லமர்ந்திருக்க

அப்பனே அயிஸ்வரியம் மெத்தவுண்டு

சீரப்பா செம்பொன்னும் ரதங்கள் மெத்த

சிரந்ததொரு படைவீரர் கரிமாவுண்டு

ஆரப்பா துலைபூமிக் கரசனாகி

தொல்புவியில் வாழ்ந்திருப்பன் சூழ்ந்துபாரே.

இன்னுமொன்றும் கேள்! மேஷம் முதல் கடகம் வரை ஒவ்வொரு மனைவியரும் இவ்விருவராக (இரண்டிரண்டு பேராக) அமர்ந்திருக்க, அச்சாதகனுக்கு ஐசுவரியம் மிகவும் உண்டாம். சிறப்பு மிக்க பொன்னாபரணச் சேர்க்கையும், ரதங்களும் சிறந்த படைவீரர்களும் யானைப்படையும் கொண்டு நீதி வழுவாது தராசுபோல் இப்புவியில் புகழ்பரப்பி மன்னனாக வாழ்வான்.
 

பகைவருக்கு எமன்

பகைவருக்கு எமன்


அரைந்திட்டேன் நாலுபேர் கூடிநிற்க

அப்பனே அதற்குமற் றோர்கள் நிற்க

பரைந்திட்டேன் பாருலக மாளும்வல்லவன்

பகருகின்ற சேனைரதம் கணக்கேயில்லை

சிரந்திட்டேன் சிற்றரசர் மெத்தவுண்டு

செகத்திலே பேருள்ள ராசனாகி

குரைந்திட்டேன் கொடுமன்னர் எதிர்த்தாரானால்

கூற்றுவனைப் போலிருப்பன் ஆறினேனே.

வேறொன்றையும் கூறுகிறேன் கேட்பாயாக! நாலு கிரகங்கள் கூடி நிற்க அவற்றுடன் மற்ற கிரகங்கள் உறவாய் நிற்க, அச்சாதகன் இந்நிலவுலகத்தை ஆளும் மன்னவன் என்றும் அவனது சேனை பலத்திற்கு அளவில்லை என்பதும், சிறந்த கப்பம் செலுத்தும் சிற்றரசர்கள் அவனுக்கு வெகுபேர் உண்டென்றும் என்றென்றும் நற்பேறும் புகழும் கொண்டு வாழ்வான் என்றும் இவனுக்கு எதிரிகள் இருப்பாரானால் அழிந்தொழிவர் என்றும்இவன் பகைவருக்கு எமன் போன்றவன் என்றும் போகமா முனிவரின் அருளாணையால் புலிப்பாணி புகன்றிட்டேன்.
 

ருது: கரண பலன்

Wednesday 5 November 2014
ருது: கரண பலன்


பவம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் சுகமுண்டாகியிருப்பாள்.

பாலவம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் செளபாக்கியவதியாயிருப்பாள்.

கெளலவம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் ரூபவதியாயிருப்பாள்.

தைதுளை கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் பக்‌ஷ்முண்டாகியிருப்பாள்.

கரசை கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் விதவையாவாள். இந்த கரணத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

வணிசி கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் கொள்ளக் கொடுக்க வல்லவள்.

பத்திரை கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் நன்மையில்லாதவள்.

சகுனி கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் நடவாதநடக்கை நடப்பாள். இந்த கரணத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

சதுஷ்பாதம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் சந்தோஷமில்லாதவள். இந்த கரணத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

சாகவம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் நன்மையில்லாதவள்.

கிம்ஸ்துக்கினம் கரணத்தில் ஒரு பெண் ருதுவானால் தரித்திரமாயிருப்பாள்.

உலகாளும் யோகம்

உலகாளும் யோகம்


ஆரப்பா அஞ்சுபே ரொன்றுகூடி

அப்பனே மற்றவர்கள் ஒற்ற்ராமல்

கூறப்பா குன்றுகளில் தனித்திருக்க

கொற்றவனே குவலயங்க ளெல்லாமாள்வன்

பாரப்பா படைவீரர் ஜெனங்கள் மெத்த

பறக்குமடா கொடித்திரையும் கடலுக்கப்பால்

சீரப்பா செம்பொன்னும் விளையும் பூமி

சிக்குமடா புலிப்பாணி செப்பினேனே.

உலகாளும் யோகம் என்பது தற்காலத்தில் சாத்தியப்படாத ஒன்று. இருப்பினும் நாடு என்றும் எடுத்துக்கொள்ளலாம். இத்தகைய யோகம் ஒருவருக்கு இருக்கவேண்டுமானால், ஜனன ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் ஒன்று கூடி ஒரே ராசியில் இருக்கவேண்டும். மற்ற நான்கு கிரகங்கள் கேந்திரஸ்தானத்தில் தனித்தனியே இருக்கவேண்டும். அதாவது 1,4,7,10 ல் மற்ற நான்கு கிரகங்கள் இருக்க வேண்டும். இப்படி இருக்க பிறந்த ஜாதகன் உலகாளும், நாடாளும் யோகம் பெறுவான். இப்படி அமைவதும் ஒரு சிலருக்கு தான். இப்படி அமையப்பெற்ற ஜாதகனுக்கு ஆளும் யோகம் மட்டும் இல்லாமல் சேவை செய்ய நிறைந்த வேலையாட்களும், அன்பு செலுத்த மகளிரும், பொன், வயல்நிலங்களும் கண்டிப்பாக உண்டு. அவனது புகழானது கடல் கடந்து நிலைத்து நிற்க்கும். 

ருது : யோக பலன்

Monday 3 November 2014
ருது : யோக பலன்



ஒருவர் ருதுவான நாளில் என்ன யோகம் என கண்டறிந்து அதற்கான பலன்களை அறிந்து கொள்ளலாம். மேலும் ருது யோக பலன் தீயதாக இருப்பின் பரிகாரம் மூலன் அதை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.


விஷ்கம்பம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் விசனமுண்டாயிருப்பாள். இந்த யோகத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

பிரீதி யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் சந்தோஷமுண்டாருப்பாள்.

ஆயுஷ்மான் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் தீர்க்காயுசுடன் இருப்பாள்.

செளபாக்கியம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் சம்பத்துண்டாயிருப்பாள்.

சோபானம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் மங்களமாயிருக்கும்.

அதிகண்டம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் பாவியயிருப்பாள். இந்த யோகத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

சுகர்மம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் சுகமாயிருப்பாள்.

திருதி யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் தைரியமுண்டாயிருப்பாள்.

சூலம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் துர்மரணமாவாள். இந்த யோகத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

கண்டம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் பாவியாயிருப்பாள். இந்த யோகத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

விருத்தி யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் நன்மையுண்டாயிருப்பாள்.

துருவம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் பதிவிரதையாயிருப்பாள்.

வியாகாதம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் விதவையாவாள். இந்த யோகத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

அரீஷணம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் யோக்கியமாயிருப்பாள்.

வச்சிரம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் நல்ல ரூபவதியாயிருப்பாள்.

சித்தி யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் சகல சம்பத்துண்டாயிருப்பாள்.

வியதீபாதம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் கொடிய விசனமாயிருப்பாள். இந்த யோகத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

பரீகம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் உறவுக்கு பகையாயிருக்கும். இந்த யோகத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

சிவம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் நல்லவளாயிருப்பாள்.

அத்தம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் திரவியமுண்டாயிருப்பாள்.

பிரமம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் பாவியாயிருப்பாள். இந்த யோகத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

மகேந்திரம் யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் வியாதியாள் மரணமாவாள். இந்த யோகத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

வைத்திருதி யோகத்தில் ஒரு பெண் ருதுவானால் உயிர்வதை செய்வாள். இந்த யோகத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்ளவேண்டியது அவசியம்.

அரசனை போல் வாழ்வு

அரசனை போல் வாழ்வு


சூடினேன் இன்னமொரு சேதிகேளு

சுபருடனே நாலுபேர் கூடிநிற்க

ஆடினேன் அத்ற்க்குநால் மற்றோரெல்லாம்

அப்பனே அவனிதனில் முழுவாழவன்

கூடினேன் கோவேறு கழுதைகோடி

கொற்றவனே துரகங்கள் கோடாகோடி

தேடினேன் தேவர் வீரர் பகையுமெத்த

திக்கெட்டு மாளுமன்னன் தெரிந்துகொள்ளே

இன்னொரு விவரத்தையும் நான் கூறுகிறேன். அதையும் நீ நன்கு கவனிப்பாயாக. சுப கிரகத்துடன் நான்கு பேர் நிற்கவும் அதற்கு நாலில் மற்றோர் நிற்க அவன் (அச்சாதகன்) பூமியில் தீர்க்காயுளுடன் வாழ்வான். அவனுக்கு கோடிக் கணக்கில் கோவேறு கழுதைகளும் அதே போல் கோடானு கோடிக் குதிரைகளும் வாய்க்கும். அது மட்டுமல்லாமல் தேர் வீரர் படையும் கொண்டு எட்டுத்திக்கும் தன் அருளாணை கொண்டு அரசாளும் மன்னன் என்றே நீ கூறுவாயாக.
 

ருது: நட்சத்திர பலன்

Sunday 2 November 2014
ருது: நட்சத்திர பலன்


அஸ்வினி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் சுபகரமாயிருப்பாள்.

பரணி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் அசல்வீடு வாழப் பொறுக்காதவள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

கிருத்திகை நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் மிக தரித்திரமாயிருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

ரோகிணி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் புத்திர சம்பத்தாயிருப்பாள்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் சுசிகரமாயிருப்பாள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் நிற்பாக்கியமாயிருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் பதிவிரதையாயிருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

பூசம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் பதிபட்சமுண்டாயிருப்பாள்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் கபடியாய் இருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

மகம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் புத்திரநாசமடைவாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

பூரம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் கர்ப்ப நஷ்டமடைவாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

உத்திரம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் தந்தானியமுண்டாயிருப்பாள்
.
அஸ்தம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் எள்ளளவும் ஆகாது. இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

சித்திரை நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் வாழ்வு குன்றியிருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

சுவாதி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் வெகுபிள்ளைகளை பெறுவாள்.

விசாகம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் அழுக்கடைந்திருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

அனுஷம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் பதிக்கு நேசமாயிருப்பாள்.

கேட்டை நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் சிறையாயிருக்கும். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

மூலம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் புத்திரருண்டாயிருப்பாள்.

பூராடம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் விசனமாயிருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

உத்திராடம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் சம்பத்துடனேயிருப்பாள்.

திருவோணம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் பாக்கியமுண்டாயிருக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் பிள்ளைகளுண்டாயிருப்பாள்.

சதயம் நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் பூரணாயுசுவுடன் இருப்பாள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் நோய்கொண்ட புருஷனை உடையவளாயிருப்பாள். இந்த நட்சத்திரத்தில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் தரித்திரமாயிருக்கும்.

ரேவதி நட்சத்திரத்தில் ஒரு பெண் ருதுவானால் சகல சம்பத்துண்டாயிருப்பாள்.

சக்கரவர்த்தி ஆகும் யோகம்

சக்கரவர்த்தி ஆகும் யோகம்


கொள்ளப்பா கோள் ஒன்று சரமாய் நான்கில்

கொற்றவனே யேகசக்கிர வர்த்தியாவன்

அள்ளப்பா அனைபரி சேனைகூட்டம்

அணியணியா யிருக்குமடா அநேகமாக

உள்ளப்பா உத்தமர்கள் அருளும்பெற்று

உலகிலுள்ள அரசரிடம் பகுதிவாங்கி

இல்லப்பா இவ்வுலகில் சேல்கண்ணாளை

இதமாகச் சுகித்திருப்பன் அனேகம்பேரே.

இதனையும் நீ நன்கு உன் மனத்துள் கொள்வாயாக! இலக்கினத்திற்கு நான்காம் இடத்தில் சரத்தில் ஒரு கோள் நிற்க அச்சாதகன் சக்கரவர்த்தியாகும் யோகம் உள்ளவன். அனேகமான யானை, குதிரை ஆகிய சேனைக் கூட்டம் மிகவும் அணி பெற்று விளங்கும். இன்னுமொன்றையும் உணர்க. இச்சாதகன் உத்தமர்களின் அருள் பெற்றவனாக இலங்குவான். உலகில் உள்ள பல அரசர்களிடம் பகுதி (கிஸ்தி) வாங்கி இன்புடைய மாதரோடு சுக ஜீவனம் செய்வான்.
 

ருது: திதி பலன்

ருது: திதி பலன்


ஒரு பெண் ருதுவான திதிக்கு பலன் உரைத்திருக்கின்றனர். இது வளர்பிறை தேய்பிறை என இரண்டுக்கும் பொருந்தும்.

பிரதமை திதியில் ஒரு பெண் ருதுவானால், பாவியாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

துவிதியை திதியில் ஒரு பெண் ருதுவானால், பாக்கியவதியாயிருப்பாள்.

திரிதியை திதியில் ஒரு பெண் ருதுவானால், குழந்தைகளைப் பெறுவாள்.

சதுர்த்தி திதியில் ஒரு பெண் ருதுவானால், பல புருஷரையிச்சிப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

பஞ்சமி திதியில் ஒரு பெண் ருதுவானால், நன்மையடைவாள்.

சஷ்டி திதியில் ஒரு பெண் ருதுவானால், சண்டைகாரியாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

சப்தமி திதியில் ஒரு பெண் ருதுவானால், புத்திரபாக்கியமுண்டாயிருப்பாள்.

அஷ்டமி திதியில் ஒரு பெண் ருதுவானால், இராட்சசியாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

நவமி திதியில் ஒரு பெண் ருதுவானால், கிலேசமாயிருப்பாள்.

தசமி திதியில் ஒரு பெண் ருதுவானால், புத்திரபாக்கியமுண்டாயிருப்பாள்.

ஏகாதசி திதியில் ஒரு பெண் ருதுவானால், சுகிகரமாயிருப்பாள்.

துவாதிசி திதியில் ஒரு பெண் ருதுவானால், பலரையுந் துஷிப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

திரியோதிசி திதியில் ஒரு பெண் ருதுவானால், நல்ல தாஜசுண்டாகி இருப்பாள்.

சதுர்த்தசி திதியில் ஒரு பெண் ருதுவானால், பாபஞ்செய்கிறவளாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

பெளர்ணமி திதியில் ஒரு பெண் ருதுவானால், அசல்வீடு திரிவாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

அமாவாசை திதியில் ஒரு பெண் ருதுவானால், தரித்திரமாயிருப்பாள். இந்த திதியில் ருதுவானவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

கோடிதனம் கொண்ட ஜாதகன்

கோடிதனம் கொண்ட ஜாதகன்


பாரப்பா பதிக்கேழு நாலே ழெட்டில்

பாங்கான கோள்களது சேர்ந்துநிற்க

சீரப்பா சென்மனுந் தனித்துநில்லான்

செம்பொன்னும் கோடியுண்டு சிற்ப்பாய்வாழ்வன்

வீரப்பா வெகுபூமிக் கரசனாகி

வீரர்படை கரிமாவும் ரதங்களுள்ளோன்

கூறப்பா குவலயதில் யென்னூல்பாரு

குணமாக புலிப்பாணி குறித்திட்டேனே.

இலக்கினத்திற்கு 4,7,8 ல் பாங்கான கிரகங்களானது பரிவுடன் சேர்ந்து நிற்கப் பிறந்த சாதகன் தனித்து நில்லான், சிறந்த செம்பொன்னும் கோடிதனமும் கொண்டவனாய்ச் சிறப்புடன் வாழ்வான். படைபலமும் யானை,குதிரை,ரதம் முதலியவை உடைவனவாய் இந்நிலவுலகில் கீர்த்தி பெறுவான். போகமா முனிவரின் அருளாணை பெற்ற புலிப்பாணி நூற்கருத்தைக் குறித்திட்டேன்.
 

ருது: வார பலன்

Saturday 1 November 2014
ருது: வார பலன்




ஒரு பெண் ருதுவான கிழமை பொறுத்து அதற்க்கான பலன்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.

ஞாயிறு அன்று ஒரு பெண் ருதுவானால், மிக வியாதியாயிருப்பாள். இவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

திங்கள் அன்று ஒரு பெண் ருதுவானால், பதிவிரதையாயிருப்பாள்.

செவ்வாய் அன்று ஒரு பெண் ருதுவானால், இடுக்கண் வுண்டாயிருப்பாள். இவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

புதன் அன்று ஒரு பெண் ருதுவானால், புத்திரரும் பொருளுமுண்டாயிருப்பாள்.

வியாழன் அன்று ஒரு பெண் ருதுவானால், பாக்கியவதியாயிருப்பாள்.

வெள்ளி அன்று ஒரு பெண் ருதுவானால், பதிபக்தி உடையவளாயிருப்பாள்.

சனி அன்று ஒரு பெண் ருதுவானால், விபத்தை அடைவாள். இவர்கள் பரிகாரம் செய்துகொள்வது அவசியம்.

விதவை பெண்ணை மணப்பவன் யார்?

விதவை பெண்ணை மணப்பவன் யார்?


வீரப்பா யின்னமொரு புதுமைகேளு

விளம்புகிறேன் வீரியன் வீட்டில்தானும்

ஆரப்பா அசுரர்குரு செவ்வாய்கூடில்

அப்பனே அமங்கலையை அணைந்துவாழ்வன்

கூறப்பா குமரனுக்கு வித்தைபுத்தி

குவலயத்தில் நிதியுண்டு சிப்பிநூல் பார்ப்பன்

சீரப்பா போகருட கடாக்ஷத்தாலே

சிறப்பாகப் புலிபாணி செப்பினேனே.

வீரமிக்கவனே! இன்னுமொரு புதுமையினையும் நன்கு கேட்பாயாக. சூரியனது வீடான சிம்மத்தில் அசுர குருவான சுக்ராச்சாரியும் செவ்வாயும் கூடினால் அச்சாதகன் அமங்கலையை அணைந்து அவனுக்கு வித்தை புத்தி மிகுந்து இந்நிலவுலகில் நிதி மிகுந்தவனாய் சிற்ப சாத்திரத்தில் வல்லவனாய் நூலாராய்ச்சி உடையவனாவன் என எனது சற்குருவான போகமாமுனிவரது அருளாணையாலே புலிப்பாணி கூறினேன்.