ஐசுவரியம் நிறைந்த ஜாதகன்

Friday 7 November 2014
ஐசுவரியம் நிறைந்த ஜாதகன்


பாரப்பா மேடமுதல் கடகம்மற்றும்

பகருகின்ற கிரகங்கள் ளிருவராக

ஆரப்பா அகங்கள் தனி லமர்ந்திருக்க

அப்பனே அயிஸ்வரியம் மெத்தவுண்டு

சீரப்பா செம்பொன்னும் ரதங்கள் மெத்த

சிரந்ததொரு படைவீரர் கரிமாவுண்டு

ஆரப்பா துலைபூமிக் கரசனாகி

தொல்புவியில் வாழ்ந்திருப்பன் சூழ்ந்துபாரே.

இன்னுமொன்றும் கேள்! மேஷம் முதல் கடகம் வரை ஒவ்வொரு மனைவியரும் இவ்விருவராக (இரண்டிரண்டு பேராக) அமர்ந்திருக்க, அச்சாதகனுக்கு ஐசுவரியம் மிகவும் உண்டாம். சிறப்பு மிக்க பொன்னாபரணச் சேர்க்கையும், ரதங்களும் சிறந்த படைவீரர்களும் யானைப்படையும் கொண்டு நீதி வழுவாது தராசுபோல் இப்புவியில் புகழ்பரப்பி மன்னனாக வாழ்வான்.
 

0 comments:

Post a Comment