புதையல் யாருக்கு?

Friday 21 November 2014
புதையல் யாருக்கு?


பணம், பணம், பணம் .எங்கு பார்த்தாலும் பணம். எதற்கெடுத்தாலும் பணம். மனிதன் தனது உண்மையான தேடலை விடுத்து எப்பொழுதும் நிலையில்லாது இருக்கும் பணத்தின் மீதே ஆர்வம் போகின்றது.

இதில் குறைகூற ஒன்றும் இல்லை, ஏனெனில் பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். பணம் இல்லாவிட்டால் ஏன் சமூகத்திற்க்கு போக வேண்டும்! வீட்டில் கூட மரியாதை இருக்காது.

இப்படிப்பட்ட இன்றியமையாத பணத்தை அடைய அனைவரும் உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். பெற்றோரை விடுத்து, கட்டிய மனைவியை பிரிந்து, பெற்ற பிள்ளையின் முகத்தை வருடக்கணக்கில் காணாமல் பணத்தின் பின்னே ஓடி ஓடி சம்பாரிக்கின்றனர்.

பலபேர் இரவும் பகலுமாக உளைத்தும் போதிய வருமானம் இல்லாமல் இருக்கின்றனர். சிலருக்கோ ஒன்றும் செய்யாமலே பணம் தானாக தேடி வரும். உதாரணமாக புதையலோ அல்லது வேறு மறைமுக வழியிலோ வந்து சேரும். இப்படி நோகாமல் பணம் கிடைப்பதற்க்கும் ஜாதகத்தில்  அமைப்பு வேண்டும்.

அதாவது ஜனன ஜாதகத்தில் ராகு லக்னத்திற்க்கு 6 ம் இடத்திலும், கேது 12 ம் இடத்திலும், தேவகுரு கேந்திரத்தில் நின்றால் அந்த ஜாதகனுக்கு புதையல் கிட்டும். அதாவது எதிர்பாராமல் பணம் அல்லது பொன்னோ நிச்சயம் வந்து சேரும்.

காலம் முழுவதும் கஷ்டபடுவோர் இருக்கையில் ,சிலருக்கு இப்படியும் அதிர்ஷ்டம் அடிக்கும். எல்லாம் அவரவர்கள் வாங்கிவந்த வரம்.

சில பொன்மொழிகள்:

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.
-ஸ்மித்.

பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்
- ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்.
-வீப்பர்.


1 comments:

  1. Unknown said...:

    அருமை ஐயா மகிழ்ச்சி

Post a Comment