சர,ஸ்திர,உபய

Sunday 31 August 2014
ராசிகளின் வகைகள்



பன்னிரு ராசிகளையும் நம் முன்னேர்கள் மூன்றுவிதமாக பிரித்தனர். அதில் முதல் வகை சர ராசி,இரண்டாவது ஸ்திர ராசி, மூன்றாவது உபய ராசி.

சர ராசி:

மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கும் சர ராசி ஆகும்.

ஸ்திர ராசி:

ரிஷபம், சிம்மம், விருட்சகம், கும்பம் ஆகிய நான்கும் ஸ்திர ராசி ஆகும்.

உபய ராசி:

மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கும் உபய ராசி ஆகும்.






குருவே சரணம்


ஜாதகமும் கோசாராமும்

ஜாதகமும் கோசாராமும்



ஜாதகமும்,கோசாராமும் நவகிரகங்களான சூரியன்,சந்திரன்,செவ்வாய்,ராகு,குரு,சனி,புதன்,கேது,சுக்கிரன் ஆகியவர்களைக் கொண்டே நிர்ண்யிக்கப்படுகின்றன.

ஜாதகம் என்பது ஒருவர் பிறந்த நேரத்தில் இந்த 9 கிரகங்களும் வான்வெளியில் எந்த இடத்தில்,எந்த பாகையில் உள்ளர் என்பதைகொண்டே தீர்மானிக்கப்படுகின்றன.பிறந்த குழந்தையின் லக்னம் கணிப்பது என்பது முக்கியமானது. 

லக்னமே பிரதானம்,அதைக்கொண்டுதான் அந்த குழந்தையின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகின்றது.

அதுபோல கோசாரம் என்பது தினமும் வான்வெளியில் கிரகங்களின் நகர்தலே கோசாரம் ஆகும்.சில கிரகம் வேகமாக நகரும்(சந்திரன்). சில கிரகம் மெதுவாக நகரும்(சனி).

ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் மாறாது,ஆனால் கோசார கிரகங்கள் அவ்வபோது நகர்ந்துகொண்டே இருக்கும்.


ஜாதக பலன்

ஜாதக பலன் சொல்லும் முறை:





ஒருவரின் ஜனன காலத்தில் எழுதப்படும் ஜாதகம் கொண்டே அவர்களுடைய வாழ்நாளில் நடக்கும்,நடக்கவிருக்கும் நிகழ்வுகளை கூறலாம்.ஜாதகம் இல்லாதவர்களுக்கு பிரசன்ன ஜோதிடம்,ஆரூடம்,நாடி ஜோதிடம் போன்ற பல ஜோதிட முறைகளை கொண்டு அவர்களுடைய நிலையை,நிகழ்வுகளை கூறலாம்.

ஆனால் ஜனன ஜாதகம் இருக்கும் பொழுது அதை கொண்டு பலன் சொல்லுவதற்க்கு என்று ஒரு முறை உண்டு.உதாரணமாக செவ்வாய் 2 ல் இருந்தால் செவ்வாய் தோஷமென்று பார்த்த மாத்திரத்தில் கூறுவது தவறாகும்.செவ்வாய் இருக்கும் ஸ்தானம் மற்றும் சேர்க்கை கொண்டு செவ்வாய் தோஷத்திற்க்கு விதிவிலக்கு ஏற்ப்படும்.

அதுபோல ஒரு பாவகத்தின் பலனை கூறும் முன்பு அதில் இருக்கும் கிரகம்,சேர்க்கை,பார்வை,அதன் அதிபதியின் நிலை,அந்த வீட்டில் அமர்ந்த கிரகம் ஏறிய சாரம்,அவருடன் சம்பந்தப்படும் பாவம்,அப்போதைய கோசாரம்,அதற்க்கான வேதை,அவரின் நிலை ,அந்த பாவகத்தோடு சம்பத்தப்பட்ட காரகன் என அனைத்து நிலையையும் ஆராய்ந்த பின்னரே பலன் கூறவேண்டும்..

அவ்வாறு இல்லாமல் இந்த பாவத்தில் பாவி இருக்கிறார்,அதனால் தீயபலந்தான் தருவார் என கூறுதல் முறையாகாது.

திருமணப்பொருத்தம்

Saturday 30 August 2014
திருமணம்(பொருத்தம்)


திருமணம் என்பது இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்களுக்கு கிடைத்த மாபெரும் வெகுமாணம்.

திருமணம் மட்டுமல்லாமல் நமக்கு நடக்கும் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம் முன்வினை பயனே.

முற்பிறப்பில் செய்த நன்மை தீமை பொருத்து தான் இப்பிறப்பில் நாம் அனுபவிக்கும் அனைத்து நிகழ்வுகளும்.

என்ன தான் இறைவன் மீதும்,ஜோதிடத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் திருமணம் என்றதும் திருமணப்பொருத்தம் பார்ப்பதும்,அதற்க்கு பரிகாரம் செய்வதும் ஏன்?.

முற்பிறப்பின் பயனால் திருமணம் தடை என்று வரும்போது தகுந்த பரிகாரமும் கிரக சாந்தியும் செய்து கொள்கிறார்கள்.

ஆக தெய்வமும் ,ஜோதிடமும் பொய் என்று எந்த நாத்திக வாதியும் சொல்லுமுடியாது,சொன்னாலும் அது அறியாமையே....


பொருத்தம்;


புராதாண நூலகளில் சொல்லப்பட்டுள்ள பொருத்தங்கள் மொத்தம்
21...இதில் தசபொருத்தங்கள் தவிர்த்து மற்றவை பார்க்கத்தேவை இல்லை என்றும்,இதுவே பிரதானம் என்று தான் தற்பொழுது அனைவரும் 10 பொருத்தங்கள் மட்டுமே பார்க்கின்றனர்......

சிலர் 12 பார்ப்பதும் உண்டு........

பொதுவாக பார்க்கப்படும் 10 பொருத்தங்கள்:



1.தினம்


2.கணம்

3.மகேந்திரம்

4.ஸ்திரிதீர்க்கம்

5.ராசி 

6.ராசி அதிபதி

7.ரச்சு

8.வசியம்

9.யோனி

10.வேதை..........

இதில் தலையாயது ரச்சு,,,,,,ரச்சு இல்லையெனில் திருமணம் செய்யக்கூடாதா?.


ரச்சு எனும் மாங்கல்ய பொருத்தம்:


                   

பொருத்தங்களில் தலையாயது ரச்சு....திருமணத்தில் முதலில் பார்ப்பது ரச்சு பொருத்தமே....

ரச்சு இல்லையெனில் திருமணப்பொருத்தம் இல்லை என்று கூறினால் மிகையாகாது......


மாங்கல்யப்பொருத்தம் இல்லை, திருமணம் செய்ய கூடாது என்று பலர் சொல்ல கெள்விப்பட்டிருப்போம்....

மாங்கல்ய பொருத்தமே ரச்சு பொருத்தம் என்பர்.....
மாங்கல்ய பொருத்தம் இல்லையென்றாலும் திருமணம் செய்யலாம்.....

அதற்க்கு சில விதிவிலக்கு உண்டு...

அந்த விதிகளிலும் அகப்படாமல் இருந்தால் மட்டுமே திருமணத்தை தவிர்ப்பது நல்லது
...




விநாயகர் அகவல்

Friday 29 August 2014
விநாயகர் அகவல்:



எண்ணிய எண்ணம் ஈடேற, கவலைகள் நீங்க, தடைபட்ட காரியம் இனிதே முடிய விநாயகர் சதுர்த்தியான இன்று விநாயகர் அகவலை படியுங்கள்......

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பல்லிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்பப் 

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் . 

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்னும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமும் புரிநூல் திகழ்ஒளி மார்பும் . 


குளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின் நிறத்தையுடைய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமான இசை ஒலிகளை எழுப்ப, இடுப்பினிலே பொன்னாலான அரைஞாண் கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும் அழகேற்ற, பெரிய பேழை போன்ற வயிறும், பெரிய உறுதியான தந்தமும், யானை முகமும், நெற்றியில் ஒளிவீசும் குங்குமப் பொட்டும், ஐந்து கைகளும், அவற்றில் இரண்டில் அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களும், மிகப் பெரிய வாயும், நான்கு பருத்த புயங்களும், மூன்று கண்களும், மூன்று மதங்களின் கசிவினால் உண்டாண சுவடு போன்ற அடையாளங்களும், இரண்டு காதுகளும், ஒளிவீசுகின்ற பொன்கிரீடமும், மூன்று நூல்கள் சேர்த்து திரித்து செய்யப்பட்ட முப்புரி நூல் அலங்கரிக்கும் அழகிய ஒளிவீசுகின்ற மார்பும்.. 

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிரே!
முப்பழம் நுகரும் மூஸிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் . 

தாயாய் எனக்குத் தானெழந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து . 

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே. 


சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து, கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி.. 

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் .

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே. 

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே . 


வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி, 1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து, உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து, 

இடைபிங், கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக். 

குண்டலி அதனில் கூடிய அசபை
லிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காளால் எழுப்பும் கருத்தறி வித்தே . 

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச். 

இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி, 

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட் எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி . 

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து . 

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெலிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து)- அழுத்திஎன் செவியில். 


உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி 

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி. 

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி. 

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே . 


அளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, அருள் வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி, சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என் உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும் நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன் என்னையும் சேர்த்து, அஞ்சக் கரத்தினுடைய உண்மையான பொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையை எனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப் பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம்.

ஓரைகள் விளக்கம்

Monday 18 August 2014
ஓரைகள் -ஒரு பார்வை


ஓரைகள் : கொஞ்சம் தெரிஞ்சிப்போம்...

நவகிரகங்களில் ராகு, கேதுவை தவிர மற்ற 7 கிரகங்களுக்கும் ஓரையில் இடமுன்டு......

சூரிய ஓரை
சந்திர ஓரை
செவ்வாய் ஓரை
குரு ஓரை
சனி ஓரை
புதன் ஓரை
சுக்கிர ஓரை

இதில் எந்த கிழமை ஆரம்பமாகிரதோ அன்று அதுவே முதல்
ஓரை.

உதா: இன்று சனி கிழமை....இன்று ஆரம்ப ஓரை சனி ஓரையே..

ஓரைகள் முறையே 1 மணி நேரம் தங்கள் ஆதிக்கத்தை செழுத்தும்...அது பஞ்சாங்கத்தில் கொடுத்திருப்பார்கள்....

ஓரைகளை எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள:
ஓரைகள் என்பது 1 மனி நேரத்துக்கு ஒரு ஓரை மாறும்..
அதாவது சனி கிழமை ஆரம்ப ஓரை சனி ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரை...

அதன் பிறகு குரு ஓரை,அதன் பின் செவ்வாய் ஓரை.....
எளிதில் நினைவு வைத்துக்கொள்ள 1 நாள் விட்டு 1 நாம் பின் நோக்கி எண்ண வேண்டும்..

சனி கிழமை:
1 நாள் விட்டு பின் நோக்கி செல்ல வியாழன்(குரு) ஓரை...1 நாள் விட்டு பின் நோக்கி செல்ல செவ்வாய்(செவ்வாய் ஓரை)

இதுபடியே ஒருநாளைக்கு 24 மணி நேரமும் ஓரைகள் மாறி மாறி வரும்......

சுப அசுப ஓரைகள்:
சுப ஓரைகள்: 

குரு, 
சந், 
சுக்கிர,
புத ஓரைகள்

அசுப ஓரைகள்:

சனி,
சூரியன்,
செவ்வாய் ஓரைகள்

கிழமைகளுக்கு பகை ஓரைகள்:
ஞாயிறு - சனி, சுக்கிரன்

திங்கள் - கிடையாது

செவ்வாய் - சனி, புதன்

புதன் - சந்திரன்

வியாழன் - கிடையாது

வெள்ளி - சூரியன், சந்திரன்

சனி - சூரியன்

அசுப ஓரைகளிலும், பகை ஓரைகளிலும் நல்ல விஷயங்களை செய்யாமல் இருப்பது நல்லது....

ஓரைகளில் செய்யத்தக்கவை:
சூரிய ஓரையில் அரசு சார்ந்த விஷயங்களும்,பத்திரம் சம்பந்தமான விஷயங்களையும்..

சந்திர ஓரையில் பிரயாணம்,மற்ற சுப காரியங்களும்,

செவ்வாய் ஓரையில் ரகசியத்தை வெளியிட கூடாது, முடிந்த வரை அமைதியாய் இருப்பது சுபம்...நிலம் சம்பந்த விஷயம் பேசலாம்...

புதன் ஓரையில் கல்வி, எழுத்து, ஜோதிடம் போன்ற விஷயங்களையும்..

வியாழ ஓரையில் அனைத்து சுப காரியங்களையும்

சுக்கிர ஓரையில் பெண்கள் சம்பந்தமான,வாகனம் சம்பந்தமான விசயங்களையும்,..

சனி ஓரையில் செவ்வாயை போலவே இருப்பது நல்லது...

மொத்தத்தில் சுப ஓரையில் சுபமும், அசுப ஓரையில் முடிந்த வரை நல்ல விஷயத்தை தவிர்ப்பது நல்லது......சற்று முயன்று தான் பாருங்களேன்...........வாழ்வில் வெற்றி பெற........

ஓரைகளின் உட்பிரிவு:
அனைவருக்கும் ஓரை பற்றி தெரியும்..சிலர் முன்பே அறிந்திருப்பீர்..ஆனால் அதன் சூட்சமம் யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை..அந்த மாதிரி பதிவுகளை படித்திருக்க மாட்டீர் என்று நினைக்கிறேன்...

ஒரு மணி நேரத்திற்க்கு ஒரு ஓரை மாறும் என்பது நமக்கு தெரிந்த்தே..ஆனால் தசா,புத்தியில் உட்பிரிவாக வரும் அந்தரம்,சூட்சமம் போல,

ஓரையில் உட்பிரிவு உண்டு...அது எப்படி எனில்...

இன்று வெள்ளிக்கிழமை...

முதல் ஓரை சுக்கிர ஓரை..

சுக்கிர ஓரையில் முதல் 12 நிமிடம் சுக்கிர அந்தர ஓரையும்
அடுத்த 12 நிமிடம் சனி ஓரையும்
அடுத்த 12 நிமிடம் சூரைய ஓரையும்
அடுத்த 12 நிமிடம் சந்திர ஓரையும்
அடுத்த 12 நிமிடம் செவ்வாய் ஓரையும் வரும்..

ஆக 1 மணி நேரத்திற்க்கு இப்படியாக அந்த குறிப்பிட்ட கிரக தாக்கம் இருக்கும்.....

கிழமைகளில் ஞாயிறு,திங்கள் என்று கிரக பெயர்கள் ஏன் வைத்தார்கள் ?.....

அந்த கிரக தாக்கம் அந்த கிழமையில் அதிகம் இருக்கும்...

அது போலவே அந்த கிழமையில், அந்த அந்த ஓரை கிரக தாக்கம் அதிகம் இருக்கும், அந்த அந்தர ஓரையில் அந்த கிரக தாக்கம் அதிகம் இருக்கும்.......

ஒரைகளுக்கு 100% பலம் உண்டு என தெரிந்து கொள்ளுங்கள்...

சரி வெள்ளி முதல் ஓரை சுக்கிர ஓரை,2 வது ஓரை புத ஓரை...

புதன் ஓரையின் உட்பிரிவு எப்படி வரும் எனில்

முதல் 12 நிமி புதன்,அடுத்து குரு,சுக்,சனி,சூரி......
புரிந்ததா?....................

ஓரை கணக்கு:
ஓரைகள் பஞ்ஞாங்கத்தில் பொதுவாக 6 மணியில் இருந்து ஆரம்பித்திருப்பார்கள்....இது பொது....

ஆனால் ஒவ்வொரு ஊருக்கும் சூரிய உதயம் அஸ்தமனம் வேறு படும்..

சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதை 12 ஆல் வகுத்து வருவதை ஒரு ஓரை எனக்கொள்ள வேண்டும்..

அதன்படியே 12 ஓரைகளும் பகல் பொழுதிற்க்கு கணக்கிடலாம்...துல்லியமாக ஓரையை கணக்கிட இம்முறையே கையாளப்படுகிறது...

இரவு பொழுதும் இப்படியே

செய்திகளும் ஓரைகளும்;
ஓரைகளுக்கும் நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் உண்டு..ஏன்?....எப்படி?....

அது எப்படியெனில், ஓரைகள் 100 % பலம் வாய்ந்தவை..நாமக்கு நடக்கும் (அ) நாம் கேட்கும் செய்திகள் ஓரை சார்ந்த கிரக காரகத்தன்மை பொருந்தியதாக இருக்கும்...

நீங்கள் திடீர் என்று ஒரு கோரமான செய்தி (விபத்து) போன்ற செய்திகள் கேட்டால் அது செவ்வாய் ஓரையோ அல்லது செவ்வாய் அந்தர ஓரையாவது இருக்கும்...

அது மட்டும் இல்லாமல் கிழமைகளுக்கு உரிய பகை ஓரைகளிலும் இது போன்ற கோர செய்திகள் கேட்பீர்கள்...

நம்மை சுற்றி நடக்கும் அனைத்திற்க்கும் காரணம் உண்டு...
முயன்றுதான் பாருங்களேன்...