ஜாதக பலன்

Sunday 31 August 2014
ஜாதக பலன் சொல்லும் முறை:





ஒருவரின் ஜனன காலத்தில் எழுதப்படும் ஜாதகம் கொண்டே அவர்களுடைய வாழ்நாளில் நடக்கும்,நடக்கவிருக்கும் நிகழ்வுகளை கூறலாம்.ஜாதகம் இல்லாதவர்களுக்கு பிரசன்ன ஜோதிடம்,ஆரூடம்,நாடி ஜோதிடம் போன்ற பல ஜோதிட முறைகளை கொண்டு அவர்களுடைய நிலையை,நிகழ்வுகளை கூறலாம்.

ஆனால் ஜனன ஜாதகம் இருக்கும் பொழுது அதை கொண்டு பலன் சொல்லுவதற்க்கு என்று ஒரு முறை உண்டு.உதாரணமாக செவ்வாய் 2 ல் இருந்தால் செவ்வாய் தோஷமென்று பார்த்த மாத்திரத்தில் கூறுவது தவறாகும்.செவ்வாய் இருக்கும் ஸ்தானம் மற்றும் சேர்க்கை கொண்டு செவ்வாய் தோஷத்திற்க்கு விதிவிலக்கு ஏற்ப்படும்.

அதுபோல ஒரு பாவகத்தின் பலனை கூறும் முன்பு அதில் இருக்கும் கிரகம்,சேர்க்கை,பார்வை,அதன் அதிபதியின் நிலை,அந்த வீட்டில் அமர்ந்த கிரகம் ஏறிய சாரம்,அவருடன் சம்பந்தப்படும் பாவம்,அப்போதைய கோசாரம்,அதற்க்கான வேதை,அவரின் நிலை ,அந்த பாவகத்தோடு சம்பத்தப்பட்ட காரகன் என அனைத்து நிலையையும் ஆராய்ந்த பின்னரே பலன் கூறவேண்டும்..

அவ்வாறு இல்லாமல் இந்த பாவத்தில் பாவி இருக்கிறார்,அதனால் தீயபலந்தான் தருவார் என கூறுதல் முறையாகாது.

0 comments:

Post a Comment