ஜோதிட தகவல்: மனித (மிருக) குணம்

Tuesday 30 September 2014
ஜோதிட தகவல்: மனிதனிடம் காணும் மிருக குணம்




வஞ்சனையாலும், சூதினாலும் சமயத்திற்கேற்ப பலவித கபடங்கள் செய்து ஜீவிப்பவன் - நரி.

ஊக்கமில்லாமல் ஏதேனும் ஒன்றை நினைத்துக்கொண்டு மனம் சோர்ந்து தலைகவிழ்ந்து உட்கார்ந்து இருப்பவன் - தேவாங்கு.

தர்மத்திலும் புகழிலும் விருப்பம் இல்லாமல் அற்ப சுகத்திழேயே மூழ்கிகிடப்பவன் - பன்றி.

சுதந்திரத்திலே இச்சை இல்லாமல் பிறருக்கு பிரியமாய் நடந்து கொண்டு வயிறு வளர்ப்பவன் - நாய்.

பொருளை அறியாமல் முன்னோரின் சாஸ்திரங்களைத் திரும்ப திரும்ப வாயினால் சொல்லிக்கொண்டிருப்பவன் - கிளிப்பிள்ளை.

பிறரது அக்கிரமத்தை நிறுத்த முயலாமல் தனது மந்த குணத்தால் பொறுத்துக்கொண்டிருப்பவன் - கழுதை.

தான் சிரமப்படாமல் பிறர் சொத்தை அபகரித்துண்பவன் - கழுகு.

                                                 
                                                    -மகாகவி பாரதி..

புலிப்பாணி ஜோதிடம்: சந்திரன் விபரம்

புலிப்பாணி ஜோதிடம்: சந்திரன் விபரம்




பாரப்பா சந்திரனுக் காட்சிநண்டு

பாங்கான விடைய துவே உச்சமாகும்

வீரப்பா வீருச்சிகமும் நீசமாகும்

விருது பெற்றதனுமீனம் கன்னி`நட்பு

ஆரப்பா அறிவார்கள் மற்றாறு ராசி

அருளில்லாப் பகையதுவே யாகும்பாரு

கூறப்பா கிரகம் நின்ற நிலையைப் பார்த்து

குறிப்பறிந்து புலிப்பாணி கூறினேனே.


நவநாயகர்களில் சந்திரனுக்கு ஆட்சி வீடு கடகம், அருமையான ரிஷபராசி உச்ச வீடாகும். போர்க்குணம் கொண்ட விருச்சிகம் நீச்ச வீடாகும். மற்றபடி தனுசு, மீனம், கன்னி நட்பாகும். ஏனைய ஆறு ராசிகளும் [மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம், கும்பம்] பகையதுவேயாகும் கிரகங்கள் நின்ற நிலையை நன்கு கவனித்துப் பார்த்துப் பலன் குறிப்பறிந்து கூறவேண்டும். 







புலிப்பாணி ஜோதிடம்: சூரியன் விபரம்

Monday 29 September 2014
புலிப்பாணி ஜோதிடம்: சூரியன் விபரம்




தானென்ற சூரியனுக்காட்சி சிங்கத்

தன்மையுள்ள மேஷமது உச்சமாகும்

தானென்ற துலாமதுவும் நீசமாகும்

தனியான தனுவுட னே மீனம் நட்பாம்

மானென்ற மற்றேழு ராசிதானும்

வரும் பகையா மென்றுனக்கு சாற்றினோம்யாம்

கோனென்ற போகருட கடாட்சத்தாலே

குணமான புலிப்பானி குறித்திட்டேனே.


நவக்கிரகநாயகனான தன்னேரில்லாத சூரியதேவனுக்கு சிம்மம் ஆட்சி வீடாகவும், மேஷம் உச்சவீடாகவும், துலாம் நீச்ச வீடாகவும் அமைவதுடன் தனித்தன்மை பெற்ற தனுசுடன் மீனம் நட்பு வீடாகும். தன்னிகரில்லாத குரு நாதரான போகரது கருணையினாலே இவை நீங்கிய மற்ற ஏழு வீடுகளும் பகையாம் என்று புலிப்பாணி விவரிக்கிறார்.





(குறிப்பு: இனி வரும் பாடல்கள் அனைத்தும் முக்கியமானவை. முடிந்தமட்டும் பாடலில் இருந்தே பொருள் புரிந்துகொள்ள முயலுங்கள். முடியாதபட்சத்தில் மட்டும், அதற்கு கீழுள்ள விளக்கத்தை பாருங்கள். எதுவும் எளிதாக கிடத்துவிட்டால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விடும்).





புலிப்பாணி ஜோதிடம்: சக்தி வழிபாடு

புலிப்பாணி ஜோதிடம்: சக்தி வழிபாடு





சத்தியே தயாபரியே ஞானரூபி
சாம்பவியே மனோன் மணியே கபாலிசூலி
முத்தியே வேதாந்தபரையே அம்மா
முக்குணமே முச்சுடரே மாயாவீரி
வெற்றியே மூவர்களுக் கருளாய்நின்ற
வேணிகையே சாமளையே பொன்னேமின்னே
சித்திடையே சோதிடமும் முன்னுரையா
சின்மயத்தின் கணேசனுட காப்பாம்பாரே.


சக்தி என்றும் கருனை வடிவானவள் என்றும், ஞான வடிவினள் என்றும், ஜம்புகேசுவரரின் மனத்திற்குகந்த சாம்பவியென்றும், மனத்திற்கு மகிழ்ச்சித்தரும் சிந்தாமணி போன்ற அன்னையென்றும், கபாலியென்றும், சூலியென்றும் மூவுலகோர்க்கும் முத்தியருளும் வேதமுதலாகியும் முடிவாகியும் அமைந்த தாயென்றும், பரையென்றும் பலவாறாய் அமைந்து [சத்துவ, ராஜஸ, தாமஸம் ஆகிய] முக்குண வடிவானவளும், அக்கினி, சூரியன், சந்திரன் ஆகிய முச்சுடர் ஆனவளும், மாயை வடிவினளும், வீரமுடையவளும் பிரம்மன், அயன், அரன் ஆகிய முத்தேவர்களுக்கும் வெற்றியினை நல்கவல்ல அருள் வடிவினராய் முறையே சரஸ்வதி, இலக்குமி,பார்வதி என்று எவ்வுலகும் பரவும் பராசக்தியே உன்றன் மின்னல் போன்ற இடையினிலே மகிழ்வுடனே சின்மய முத்திரையோடு வீற்றிருந்து அருளும் கணேசனது அருளால் இந்நூலினைப் படைக்கிறேன். 

இனி உலகனைத்தும் பலவாறாய்ப் பரவும் பரையே சக்தித்தாயே உன் மைந்தன் கணேசருடைய அருள் நோக்கால் நான் படைக்கும் இந்நூலை அவர் பரிவுடன் காப்பார்.

ஜோதிடம் பயில்பவரும், சொல்பவரும் அன்னை பராசக்தியின் அருளைப் பெற அவளை ஏதாவது ஒரு ரூபத்தில் வணங்கி வழிபட வேண்டும். அன்னையின் அருளைப் பெறாமல் ஜோதிடராக முடியாது என்று புலிப்பாணி விளக்குகிறார்.
 



புலிப்பாணி ஜோதிடம்: கடவுள் வாழ்த்து

புலிப்பாணி ஜோதிடம்: கடவுள் வாழ்த்து





ஆதியெனும் பராபரத்தின் கிருபைகாப்பு
அன்பான மனோன்மணியாள் பாதங்காப்பு
சோதியெனும் பஞ்சகர்த்தாள் பாதங்காப்பு
சொற்பெரியகரிமுகனுங் கந்தன்காப்பு
நீதியெனு மூலகுரு முதலாயுள்ள
நிகழ்சித்தர்போகருட பாதங்காப்பு
வாதியெனும் பெரியோர்கள் பதங்காப்பாக
வழுத்துகிறேன் ஜோசியத்தின் வன்மைகேளே


ஆதியென்றும் பராபரை என்றும் அகிலமெல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியாளின் திருவடிக்கமலங்கள் எனக்குக் காப்பாக அமையும். என்றென்றும் எவ்வெவர்க்கும் அன்பு வடிவாக இயங்கி ஆதரித்திடும் மனத்திற்குகந்த இன்பம் அருளும் மனோன்மணியான வடிவுடை நாயகியின் செந்தாள் மலர்க்கமலம் எனக்குக் காப்பாக அமையும். மற்றும் சோதிவடிவாக இலங்கி மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளின் நுகர்வாய் அமைந்த ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசையென்னும் ஐம்புல நுகர்வுகளுக்கு உரிமை கொண்ட தெய்வங்கள், எனக்குக் காப்பாக அமைவதுடன் ஓங்காரத்துட் பொருளைத் தன்னுருவிலேயே கொண்ட வேலமுகத்தானும் அவனது விருப்பினுக்குரிய அருட்பெருங் கடலான திருமுருகனும் எனக்கு [என்கவிக்கு] காப்பாக அமைவதுடன் நீதியினையே என்றும் பொருளாய்க் கொண்டு இலங்குகின்ற பிரகஸ்பதி முதலாக உள்ள சித்தர்களில் என் குருவாகிய போகரது திருவடிகளும் எனக்குக் காப்பாக அமைவதுடன் என்றென்றும் தங்கள் அருள் நோக்கால் ஆதி முதல் என்னை ஆதரிக்கும் சான்றோர் தமது திருவடிக்கமலங்களைச் சிரசில் சூடி நீதியான முறையில் சோதிடத்தின் வண்மையினை நான் உரைப்பேன், கேட்டுப் பயனடையுங்கள். 


புலிப்பாணி ஜோதிடம்: முன்னுரை

புலிப்பாணி ஜோதிடம்: முன்னுரை



புலிப்பாணி என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவர். இவர் பழனி மலையில் ஜீவ சமாதியான போகரின் சீடர். போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து நீரெடுத்து வந்ததால் (புலி + பாணி) இப்பெயர் பெற்றார். இவரால் வைத்தியம் 500, சாலம் 325, வைத்திய சூத்திரம் 200, பூசா விதி 50, சண்முக பூசை 30, சிமிழ் வித்தை 25, சூத்திர ஞானம் 12 மற்றும் சூத்திரம் 90 எனப் பல நூல்கள் எழுதப்பட்டு உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன. 

ஒரு மனிதன் பிறக்கும் போது வானில் உள்ள கிரக மண்டலங்களின் அமைப்பு மற்றும் கிரகங்களின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் குண நலன்கள் மற்றும் வாழ்க்கைப் பாதையைக் கடக்கும் போது ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றினைத் துல்லியமாக தனது ஞான திருஷ்டியின் மூலம் தெரிந்து கணக்கீடாக கணிக்கும் வகையில் வகுத்தளித்துள்ளனர். 

இத்தகைய ஜோதிட சாஸ்திர நூல்களில் தனி சிறப்பாக சொல்லக் கூடியது புலிப்பாணி சித்தரின் புலிப்பாணி ஜோதிடம் 300என்னும் நூலாகும். இதில் உள்ள 300 பாடல்களும் மனித வாழ்வில் சரியாக பொருந்தி வருகிறது. இதன் மூலமாக ஒருவருடைய வாழ்வில் நடந்த, நடக்கும், நடக்க போகும் செயல்கள் எல்லாம் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும். 



ஜோதிட தகவல்: திருவாழ்கொளிபுத்தூர் ரத்னபுரீஸ்வரர்

ஜோதிட தகவல்: திருவாழ்கொளிபுத்தூர் ரத்னபுரீஸ்வரர்





பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:திருவாள்ஒளிப்புற்றூர், திருவாழ்கொளிபுத்தூர்
ஊர்:திருவாளப்புத்தூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு



ஒவ்வொரு மாத பவுர்ணமிதோறும் மகாலட்சுமி பூஜை நடை பெறும் திருவாழ்கொளிபுத்தூர் ரத்னபுரீஸ்வரர்[மாணிக்கவண்ணர்]ஆலயத்தில் மகாலட்சுமியை இந்த மகாலட்சிமிகுரிய இந்த நவராத்திரி திருநாளின் ஆறாம் நாளில்[29-9-14] வழிபட்டு பொன் ,பொருள் ,ஆபரண சேர்கை கிடைக்கும் வரம் பெறுஓம்.

திருவாழ்கொளிபுத்தூர்[வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து 9 கி.மி.] வண்டமர் பூங்குழலி[ஸ்ரீப்ரமா குந்தலாம்பாள்] உடனுறை ரத்னபுரீஸ்வரர்[மாணிக்கவண்ணர்] திருக்கோயில்.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; நவராத்திரி 7-ஆம் நாள்[30-9-14] சரஸ்வதி வழிபாடு செய்வது சிறப்பு ..அதுவும் சரஸ்வதி ஈசனை வழிபட்ட வாணியம்பாடி[ வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில்,58 கி.மீ.] பெரியநாயகி உடனுறை அதிதீஸ்வரர் தலத்தில் வழிபாடு செய்வது நல்வரம்களை எளிதில் பெற்று தரும் ....



யாழைப்பழித்த மொழியாள்[வீணாவாதவிதூஷணி] உடனுறை வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் ..... ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; நவராத்திரி 8-ஆம் நாள்[1-10-14] சரஸ்வதி வழிபாடு செய்வது சிறப்பு ..அதுவும் சரஸ்வதி ஈசனையும்,அம்பாளையும் வழிபட்ட திருமறைக்காடு[வேதாரண்யம்] தலத்தில் இந்நன்னாளில் வழிபடல் சகல நன்மை,மேன்மைகளையும் பெற்று தரும் ... திருமறைக்காடு[நாகப்பட்டினத்தில் இருந்து 45 கி.மி.]


;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;; நவராத்திரி 9-ஆம் நாள் "சரஸ்வதி பூஜை "[2-9-14], சரஸ்வதியும் ,மகாலக்ஷ்மியும் ஒரே கருவரையில் இருந்து அம்பாள் கிரிகுஜாம்பிகையை வழிபடும் ,திருநாகேஸ்வரம் நாகநாதர் திருகோயில் சென்று வழிபடு ஓம் ......திருநாகேஸ்வரம் பிறையணி வானுதலாள் உடனுறை நாகநாதர் திருகோயிலில் ஒரே கருவரையில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர்.


விஜய தசமி [3-9-14] நள்இரவு 12 மணிக்கு திருசெந்தூர் அருகில் உள்ள குலசை குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருகோயில் கடற்கரை அருகில் முத்தாரம்மன் மகிசாசூரனை வதம்.

'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''' விஜய தசமி [3-9-14] ,"பரிவேட்டை" கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோயில்யில் 3-9-14 மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி அருகில் உள்ள பெருமாள்புரம் வெட்டிமுறிச்சான் இசக்கி அம்மன் திருக்கோயில் அருகில் கன்னியாகுமரி பகவதி அம்மன் பாணாசூரனை வதம் செய்யும் பரிவேட்டை நிகழ்வு செய்யும் நிகழ்வு நடைபெறும்....

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

ஆதிலட்சுமி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி பஞ்சுத் திரி போட்டு பசும் நெய் தனை ஊற்றி குங்குமத்தில் பொட்டிட்டு கோல மஞ்சள் தானும் இட்டு பூமாலை சூட்டி வைத்து பூசிப்போம் உன்னை-திருமகளே திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக (திருவிளக்கை) வாசலிலே மாக்கோலம், வீட்டினிலே லட்சுமீகரம் நெற்றியிலே ஸ்ரீசூர்ணம், நெஞ்சினிலே லட்சுமீகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்ப மயம் அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் சேம மயம் அலைமகளே வருக ஐஸ்வர்யம் தருக மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம் ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஒரு வாசம் அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம் அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலட்சுமி திருநாமம்! சங்கு சக்ரதாரி நமஸ்காரம் சகல வரம் தருவாய் நமஸ்காரம் பத்மபீட தேவி நமஸ்காரம்
பக்தர் தம்மைக் காப்பாய் நமஸ்காரம்





தகவல் அளித்தவர்

சிவ .அ.விஜய் பெரியசுவாமி ,
கல்பாக்கம்,
9787443462, ......சிவாய நம..........

கோயில் திருப்பதிகம்-வீடியோ

Sunday 28 September 2014




நமது நண்பராண, நமது குழுவில் ஒருவரான பாலாஜி அவர்கள் தனது முயற்ச்சியில் உங்கள் கண்கள் கவரும் வண்ணம் அருமையாக திருப்பதிகத்திற்கு நடனம் செய்துள்ளார். நமது குழுவில் இருக்கும் அனைவரும் அதை கண்டுகளித்து,தங்களின் ஆதரவினை தரும்படி வேண்டுகிறேன்.

திரு பாலாஜி அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..


ஜோதிட தகவல்: கிரகணத்தில் ருது பலன்

தியாஜ்ய காலம்,சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய காலத்தில் பெண் ருதுவோ (அ) பிறந்தாலோ ஏற்படும் பலன்கள்:





தியாஜ்யகாலம் என்பதற்கு "விஷகாலம்" என்பது பொருள். அதாவது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் 4 நாழிகைகள் விஷ நாழிகை எனப்படும். அந்த விஷநாழிகையில் ஒரு பெண் ருதுவானாலும் அல்லது ஜனனம் ஆனாலும் துன்பமே நேரும்.

அந்த 4 நாழிகையில், முதல் நாழிகையில் இது(ருது (அ) பிறப்பு) நிகழ்ந்தால் தந்தைக்கு மரணமும், இரண்டாவது நாழிகையில் நிகழ்ந்தால் தாய்க்கு மரணமும், மூன்றாவது நாழிகையில் இது நிகழ்ந்தால் தன நாசமும், நான்காவது நாழிகையில் இது நிகழ்ந்தால் தனக்கே அழிவும் உண்டாகும்.

அதுபோல சூரிய கிரகணம் நிகழும்போது ஒரு பெண் ருதுவானாலோ அல்லது பிறந்தாலோ தந்தைக்கு மரணமும், சந்திர கிரகணம் நிகழும்போது ஒரு பெண் பிறந்தால் அல்லது ருதுவானால் தாய்க்கு மரணமும் உண்டாகும் என சாஸ்திர நூல் தெரிவிக்கின்றது. 



குருவே சரணம்..

தசா/புத்தி பலன்: விரய பாவகம்

பன்னிரண்டாமாதிபன் தசை/புத்தி




லக்கினத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் உடல் நலக்குறைவும் கபம் சம்பந்தமான ரோகங்களும் கல்வியும் செல்வமும் இல்லாத தரித்திர வாழ்க்கையும் உண்டாகும் ஆண்மைக்குறைவு, தாம்பத்திய சுகம் இலலாமையும் உண்டாகும் தன்னம்பிக்கை இன்மையும், சுயமுயற்சி இன்மையும் வாழ்க்கையில் விரக்தியும் உண்டாகும்.

இரண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தரித்திர வாழ்க்கையும், தன்னுடைய வீடு மனைவி எல்லாவற்றையும் பிரிந்து சுற்றி அலையும் வாழ்க்கையும் விஷ்ணு பக்தியும் தயாள சிந்தையும் உண்டாகும்.

மூன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கோழைத்தனமும் எதிலும் அக்கறையற்ற தன்மையும் சகோதரர் இல்லாமையும் தனக்கு உதவி இல்லாமையும் தானே தனியாக வயிறு வளர்த்துக்கொண்டு போகும் அவல நிலைமையும் உண்டாகும்.

நான்காம் இடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாய்க்கு கண்டமும் தரித்திர வாழ்க்கையும் வீடு வாசல் சொத்து சுகங்களை இழந்து விடும்படியான நிலைமையும் கஷ்டங்களும் துக்கங்களும் உண்டாகும்.

ஐந்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாம்பத்திய வாழ்க்கையில் அக்கறை இல்லாமையும் புத்திர நஷ்டங்களும் புத்திர பாக்கியக் குறைவும் கல்வி இன்மையும் கெட்ட வழிகளில் செல்லும் மனப்போக்கும் தன்புத்திக்குறைவால் தன்னிடம் இருந்த சொத்துக்களையும் இழந்து விடுதலும் மந்த புத்தியின் காரணமாக தன்னுடைய சுகபாக்கியங்கள் எல்லாவற்றையும் இழந்து அலையும்படியான வாழ்க்கையும் உண்டாகும்.

ஆறாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னிய ஸ்திரீகளைச் சுற்றி அலைவதும் பாவசிந்தையும் புத்திர சோகங்களும் அன்னியரின் சொத்துக்களைத்தான் அடைதலும் உண்டாகும்.

ஏழாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் மனைவியை இழந்து விடுதலும் அல்லது மனைவியிடம் விருப்பமின்மையும் உடல் நலக்குறைவும் சக்தி இன்மையும் பொருள் நஷ்டங்களும் உண்டாகும்.

எட்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் கெட்ட நடத்தையும் பெண்களால் பொருள் விரயமும் பாவகாரியங்களில் மனம் பிரவேசித்து அலைதலும் நரகத்தை அடையும் படியான பாவங்களைச் செய்தலும் உண்டாகும்.

ஒன்பதாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தந்தைக்கு மரணம், தந்தை வழி சொத்துக்களை இழத்தல், பெரிய காரியங்களில் ஆர்வமும் முயற்சியும் இல்லாமை கிடைத்தது போதும் என்ற அக்கறை இல்லாமல் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகும் தன்மை, முதலானவை உண்டாகும்.

பத்தாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியர் காரியங்களைச் செய்வதன் மூலம் லாபம் உண்டாகும். புத்திரபாக்கியம் இராது. தனக்கென்று தொழில், புகழ் சொத்துக்கள் முதலாவை இல்லாமல் இன்னொருவர் ஆதரவில் வாழ்க்கை நடத்தும் படியாக நேரிடும்.

பதினொன்றாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் தாம்பத்திய சுகம் இல்லாமலும் புத்திரபாக்கியம் இல்லாமலும் வாழ்க்கை நடத்த நேரிடும் சொத்து சுகம் இருந்த போதிலும் அனுபவிக்க வாய்ப்பு ஏற்படாது.

பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை /புத்தி நடத்தினால் அன்னியருடைய சொத்துக்கள் மனைவியரை அடைவதும் பாவச் செயல்களில் நாட்டமும் அவற்றில் வெற்றியும் உண்டாகும் தன் பிள்ளைகளால் துக்கமும், பொருள் நாசமும் உண்டாகும் மனைவி மக்களுடன் விரோதமும் குடும்பத்தை விட்டு பிரிந்து அன்னிய ஸ்திரீயிடம் போய் சேர்ந்து விடும்படியான நிலைமையும் ஏற்படும்.




ஜோதிட செய்தி: 27.09.2014

Saturday 27 September 2014
ஜோதிட செய்தி: 27.09.2014






1. ஐந்தில் சனி அல்லது சுக்ரன் அல்லது ராகு இருப்பின் அதிக பெண் குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு.

2. குரு உச்சம் பெற்று சந்திரனை பார்த்தால் ஜாதகர் நீண்ட ஆயுள் உடையவர், நல்ல உடல் வாகு உடையவராயிருப்பார்.

3. லக்னத்திற்க்கு பன்னிரண்டில் குரு இருப்பின் ஜாதகருக்கு காதல் மற்றும் கட்டாயத் திருமணம் நடைபெற வாய்ப்புண்டு.

4. ஏழில் செவ்வாயும் குருவும் சேர்ந்து இருந்து அசுபர் பார்வை இல்லாது இருப்பின் அந்த ஜாதகிக்கு கௌரவமான பதவியில் உள்ள கணவர் கிடைப்பார்.

5. ஏழில் சனியுடன் (சூரியன் இல்லாது) புதன் அல்லது சுக்ரன் இணைந்து இருப்பின் திருப்தியற்ற மண வாழ்க்கை.

6. எவர் ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் - ஏழாம் வீட்டில் தனியாக இருக்கிறாரோ, அவர்கள் திருமணம் ஒரு கேள்விக்குறியாகி விடுகிறது. திருமணம் நடந்தாலும், அது எப்படி , எவ்வளவு இடையூறுகளுக்கு இடையில் நடந்தது என்பது , அந்த ஜாதர்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.

7. ராகு, சூரியன் மற்றும் சனி ஆறாம் இடத்துடன் சம்பந்தப்படால் அந்த ஜாதகருக்கு தாய் மாமன் உறவு பாதிக்கும்.

8. ஆறில் சனி கெட்டால் ஜீரண கோளாறு இருக்கும். இதனால் அந்த ஜாதகர் அதிகம் சாப்பிடுவார்.

9. குரு பார்வை இல்லாது ராகு/கேது ஒன்று/ஐந்து/ஒன்பதில் இருந்து லக்னாபதியும் பலம்  இல்லாவிட்டால் வேற்று மதங்களில் மனம் செல்லும் வாய்ப்பு உண்டு.



தகவல் அளித்தவர்,

திரு சோமசுந்தரம் அவர்கள்,
மதுரை.

ஜோதிட தகவல்: ஓரை

ஓரை (ஹோரை) அட்டவணை





மணி-முதல்
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
6.00 - 7.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
7.00 - 8.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
8.00 - 9.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
9.00 -10.00
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
10.00 -11.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
11.00 -12.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
12.00 -01.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
01.00 -02.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
02.00- 03.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
03.00-04.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
04.00-05.00
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
05.00-06.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
06.00 -07.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
07.00 -08.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
08.00 -09.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
09.00 -10.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
10.00 -11.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
11.00 -12.00
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
12.00 -01.00
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
01.00 -02.00
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
02.00- 03.00
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
03.00-04.00
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்ரன்
சனி
04.00-05.00
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
05.00-06.00
புதன்
குரு
சுக்ரன்
சனி
சூரியன்
சந்திரன்
செவ்வாய்



தகவல் அளித்தவர்,

திரு சோமசுந்தரம் அவர்கள்,
மதுரை.