லக்னம் பாகம்:2

Tuesday 9 September 2014
லக்னம் பாகம்:2



நடிகர்கள் பலர் இருப்பினும் நமக்கு பிடித்த நடிகர்,நடிகை என நாம் கூறுவது ஒரு சிலரைத்தான். ஏன் இந்த பாகுபாடு?. நடிகர்களை நமக்கு பிடிக்க காரணம் அவரது நடிப்பு,ஆக்சென் என பல உண்டு.

ஆனால் நடிகைகளை நமக்கு பிடிக்க பல காரணம் இருப்பினும் அதில் முதலாவதாக வருவது அழகு. இவ்வளவு அழகாகவும் பெண்கள் உள்ளார்களா, என சில நேரங்களில் நமக்கே தோன்றும்.

அப்படி ஒரு அழகு எங்கு இருந்து வந்தது என கேட்டால் அனைத்திற்க்கும் இறைவனே காரணம்,விஞ்ஞானப்படி ஜீனும் காரணம். இப்படி ஒருவர் அழகாய் தேவதையை போல இருப்பாரா இல்லை எப்படி இருப்பார் என நாம் ஜனன ஜாதகத்தை கொண்டு அறிய இயலும்.

நமக்கு வரப்போகும் மனைவி அழகானவளா என எப்படி அறிவது?. திருமணத்திற்க்கு வரன் தேடும் போதே பெண் ஜாதகம் மாப்பிள்ளை வீட்டாரிடம் கொடுப்பார்கள். அதை கொண்டு அவள் அழகை எப்படி அறிவது?. பெண் ஜாதகத்தில் 1ம் இடம் கொண்டு அறியலாம்.

அதாவது அழகு பற்றிய விஷயங்களை நாம் ஜனன ஜாதகத்தில் லக்னம் கொண்டு அறிய முடியும். அதுபோல நமது ஜாதகத்தில் 7ம் இடம் கொண்டும் பெண்ணை பற்றி அறியலாம்.

அழகை மட்டும் இல்லை ,ஜாதகம் கொண்டு ஆதி முதல் அந்தம் வரை அறிய இயலும். ஆனால் அனைத்தையும் கற்று முடிப்பதற்கு நமக்கு காலம் போதாது.



குருவே சரணம்..

0 comments:

Post a Comment