சனி பெயர்ச்சி 2014(7 1/2 சனி கால பலம் ஸ்பெஷல்)

Friday 12 September 2014
சனி பெயர்ச்சி 2014(7 1/2 சனி கால பலம் ஸ்பெஷல்)




திருக்கணிதப்படி ஜய வருடம் ஐப்பசி மாதம் 16 ம்(02.11.2014) தேதியும், வாக்கியப்படி மார்கழி 1ம்(16.12.2014) தேதி சனி துலாமில் இருந்து விருட்சகத்திற்க்கு பெயர்ச்சி ஆகிறார்.

(இது பொது சனி பெயர்ச்சி பலனோ, நட்சத்திர அடிப்படையில் சம்பந்தம் பெறும் இல்லத்தின் காரக அடிப்படையிலோ,பார்வை பலனோ இல்லை. இது சனி இருக்கும் நட்சத்திரம் கொண்டு ஜென்ம நட்சத்திரம் சம்பந்தம் வைத்து 7 1/2 சனி காலம் முழுவதும் சனீஸ்வர பகவான் ஒவ்வொரு நட்சத்திரமாக நகரும்போது ஏற்படும் சுப அசுப பலன். இது 7 1/2 சனி உள்ளவர்களுக்கு மட்டும் பொருந்தும்).

நவ கிரகங்களில் மிகவும் பொறுமையாக ராசி மண்டலங்களை சுற்றி வருபவர் சனீஸ்வர பகவான். அவரின் தாக்கம் 2 1/2 வருடம் காலம் நீடிப்பதால் தான் சனிப்பெயர்ச்சி இப்படி பெரும்பாலும் பேசப்படுகிறது.

இதில் 7 1/2 சனி என்பது சனீஸ்வர பகவான் ஜனன ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி கட்டத்திற்க்கு 12,1,2 இடத்தை கோசார ரீதியாக கடப்பது ஆகும். 7 1/2 சனி என்றால் முதல் 5 வருட காலம் சிக்கலாகவும் ,கடைசி 2 1/2 வருடம் அவ்வளவு பாதிப்பு இருக்காது. இது பொது.

ஆனால் 7 1/2 சனி கால பலம் என்பது 7 1/2 சனி நடந்துகொண்டிருக்கும்பொழுது ஒருவரது ஜென்ம நட்சத்திரம் கொண்டு,சனீஸ்வர பகவான் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் சஞ்சாரம் செய்யும் போது அவரால் ஏற்படும் சுப அசுப பலனை கூறுவதாகும். இதனால் 7 1/2 சனி காலத்தில் எப்பொழுது அவர் நன்மை தீமை செய்வார் என அறியலாம். இதனால் 7 1/2 சனி முழுவதும் அவர் தீமையையே செய்வார் என நாம் நினைப்பது முற்றிலும் தவறு என நமக்கு புரிகிறது.

துலாம், விருட்சகம் & தனுசு:













(துலாம் ராசிக்காரர்களுக்கு பாதச்சனி ஆரம்பம்)

சித்திரை 3,4 ம் பாதம் நட்சத்திரகாரர்களுக்கு:

ஜென்ம சனியால் அவதிப்பட்டுவரும் தங்களுக்கு கார்த்திகை 14 வரை அது தொடரும். தங்களது ஜென்ம நட்சத்திர அடிப்படையில் அதன் பின் சனி பகவான் தனது தாக்கத்தை குறைத்து நற்பலன்களை வழங்குவார். கொஞ்சகாலம் மட்டும் பொருத்துக்கொள்ளுங்கள்.நீங்கள் பட்ட கஷ்டம், நஷ்டம் எல்லாம் தீர்ந்து போகும். எல்லா விதத்திலும் நன்மையே நடக்கும், காரிய வெற்றி, சத்ரு ஜெயம் என சகலமும் தங்களுக்கு சாதகமாக அமையும்.

மொத்தத்தில் அசுபம் பின் சுப பலன்.

சுவாதி & விசாகம் 1,2,3 ம் பாத நட்சத்திரகாரர்களுக்கு:

தங்களுடைய ஜென்ம நட்சத்திர அடிப்படையில் சனி பெயர்ச்சி ஆன பின்பும் தங்களுக்கு சுப பலன் தரமாட்டார். காரிய தோல்வி, நினைத்தது பலிக்காமை, துன்பம், கஷ்டம், கலகம், பிரச்சனை,நஷ்டம் என அவரால் தாங்கள் தீய பலனே அனுபவிப்பீர். ஜனன ஜாதகப்படி தசா,புத்தி நன்றாக இருந்தால் இதை பற்றி கவலை வேண்டாம். சிவாலயம் செல்லுங்கள், சனி பகவானை வணங்குங்கள்.

மொத்தத்தில் அசுப பலனே.










(விருச்சக ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி ஆரம்பம்)

விசாகம் 4ம் பாதம், அனுஷம்,கேட்டை நட்சத்திரகாரர்களுக்கு:

விசாகம் 4ம் பாதம், அனுஷம்,கேட்டை ஆகிய மூன்று நட்சத்திர காரர்களுக்கு ஜென்ம சனியாக வரப்போகும் சனி பகவான் நன்மை செய்யமாட்டார். காரிய தோல்வி, தொழில் நஷ்டம், பல கஷ்டங்களை தர உள்ளார். ஆகையால் சனீஸ்வர பகவானை வணங்குவதையும், பிரதோஷ காலத்தில் சிவாலயம் சென்று அர்ச்சனை செய்வதையும் மறக்காதீர். தீய பலன்கள் நடக்காமல் அவர் பார்த்துக்கொள்வார்.

மொத்தத்தில் அசுப பலனே.










தனுசு ராசிகாரர்களுக்கு 7 1/2 சனி ஆரம்பம்.

மூலம் நட்சத்திரகாரர்களுக்கு:

7 1/2 சனி ஆரம்பித்து கார்த்திகை 14 முடிய தங்களுக்கு சுப பலனே நடைபெறும் கவலை கொள்ளத் தேவை இல்லை.கால பலம் அடிப்படையில் அதன் பிறகு தாங்கள் எடுத்த காரியங்களில் தோல்வி, கஷ்டம், கலகம், ஆபத்து, குழப்பம் போன்ற அசுப பலன்கள் நிகழும் 2015 முடிய. இருப்பினும் தங்களது தசா புத்தினாதன் வழுவாக இருந்தால் இந்த அசுப பலன் நடைபெற வாய்ப்பு குறைவு.

மொத்தத்தில் சுபம் பின் அசுப பலன்.

பூராடம் & உத்ராடம் 1ம் பாதம் நட்சத்திரகாரர்களுக்கு:

நீங்கள் விரைய சனியை நினைத்து பயப்படவே தேவை இல்லை. விரையச்சனி ஆரம்பித்தாலும் தங்களது ஜென்ம நட்சத்திர அடிப்படையில் அசுப பலன்களை தரமாட்டார். 2015 முடிய உங்களுக்கு சனிபகவானால் நன்மையே ஏற்படும். கவலை வேண்டாம்.

மொத்தத்தில் சுப பலனே.



குருவே சரணம்..

0 comments:

Post a Comment