சூரியன் தரும் பாதகம்

Tuesday 21 October 2014
சூரியன் தரும் பாதகம்



கூறேநீ ஈராறும் ரெண்டுரெண்டு

கொற்றவனே பாக்கியமும் யேழோடஞ்சில்

ஆரேனீ ஆதித்த னிருந்தானானால்

அப்பனே அங்கத்தில் காந்தலுண்டு

சீரேனீ சொற்பனமும் சிரங்குகண்ணோய்

சிவசிவா சிந்தித்த தெல்லாமாகும்

கூறேனீ போகருட கடாக்ஷத்தாலே

கொலையீனார் பகையது வருகுஞ்சொல்லே

சூரியபகவான் 2,3,4,7,5 ஆகிய இடங்களில் இருப்பாரேயானால் [இலக்கினத்திலிருந்தது] அச்சாதகனுக்கு உடலில் காந்தல் உண்டென்றும் சொற்ப அளவிற்கே சீர் பெறுவான் என்றும், சிவனருளால் சிரங்கு, கண்ணோய் முதலியன ஏற்படும் என்றும் நின்று இதந்தரும் என் குருநாதரான போகரது கருணா கடாக்ஷத்தாலே இம் மகனுக்கு, வஞ்சித்துக் கொலை செய்யும் ஈனர்களின் பகையும் வரும் என்று கிரகநிலையை நன்கு ஆய்ந்தறிந்து பலன் கூறுவாயாக.



0 comments:

Post a Comment