சகடயோகம்

Saturday 25 October 2014
சகடயோகம்


சீரே நீகுருவுக்கு வியமாறெட்டில்

செழுமதியும் மதிலிருக்க சகடயோகம்

ஆரே நீ அமடுபயம் பொருளும் நஷ்டம்

அப்பனேபேர் விளங்கும் நிதியுமுள்ளோன்

கூறே நிகுருவுக்கு கேந்திரகோணம்

குழவிக்கு நிதி கல்வி மெத்தவுண்டு

பாரே நீபோகருட கடாக்ஷத்தாலே

பாடினேன் புலிப்பாணி பதமாய்த்தானே

நான் கூறும் ஒரு சிறப்பினையும் நீ குறித்துக் கேட்பாயாக. குருபகவானுக்குப் பன்னிரண்டு, எட்டு, ஆறு ஆகிய இடங்களில் சிறந்த சந்திர பகவான் இருக்க ஏற்படுவது சகடயோகம் ஆகும். அதனால் ஏற்படும் பலன்கள் என்னவெனின் அமடு, பயம், பொருட்சேதம், எனினும் நற்கீர்த்தியே வாய்க்கும். நிதியும் சிறந்து காணும். இன்னுமொன்று குரு 1,4,7,10 மற்றும் 1,5,9 ஆகிய இடங்களில் இருக்க அச்சாதகனுக்கு கல்விச்சிறப்பு மெத்தவும் உண்டாகும். எனது சற்குருவான போகமாமுனிவரது கருணா கடாட்சத்தை முன்னிறுத்தி நான் (புலிப்பாணி) இதனைப் பதமாகப் கூறினேன்.
 



0 comments:

Post a Comment