சனி தரும் பாதகம்
பாரப்பா இன்னமொன்று பகரக்கேளு
பானுமைந்தன் பன்னொன்றி
லமைந்தவாறும்
சீரப்பா சிறந்தகுரு சப்தமத்தில்
சீறிவரும் கரும்பாம்பு
நாலிலேற
ஆரப்பா ஆரல்யிரு மூன்றதாகும்
அப்பனே அருக்கனுந்தான்
மூன்றில்போக
வீரப்பா விலகுமடா தோஷம் தோஷம்
விதியுண்டு சென்மனுக்கு
விளம்பக்கேளே
|
இன்னுமொரு கருத்தையும் உனக்கு விளக்கமாகக்
கூறுகிறேன் நன்கு கேட்பாயாக! கதிர் மைந்தனாம் சனி 11இல் அமைந்து சிறப்புமிக்க
குருபகவான் சப்தம (7ல்) ஸ்தானத்திலும் இராகு 4 ஆம் இடத்திலும், செவ்வாய்
மூன்றிலும், சூரிய மூன்றில் போய் நிற்க (சனி பகவானால்) தோடம் உண்டெனினும்
சென்மனுக்கு ஆயுள் உண்டென்று கூறுவதுடன் மேலும் நான் சொல்லும் கருத்துகளையும்
கேட்பாயாக!
0 comments:
Post a Comment