புலிப்பாணி ஜோதிடம்: 11&12ல் மாந்தி
தானென் பதினொன்றில் குளிகன் நிற்கத்
தரணிதனில் பேர்
விளங்குந் தனமுமுள்ளோன்
யேனென்ற அயன்விதியும் அறிந்துசெப்பு
யென்மகனே வசியனடா
ஜாலக்காரன்
வீணென்ற விரயனடா ரசவாதத்தால்
விளம்புகிறேன் வீடுமனை
கொதுவை வைப்பான்
கோனென்ற போகருட கடாக்ஷத்தாலே
கொற்றவனே வியத்தில்
நின்ற பலனைக்கூறே
|
இலக்கினத்திற்கு பதினொன்றாம் இடத்தில் குளிகன்
நிற்கப் பிறந்த சாதகன் பூமியில் நல்ல புகழ் உடையவனேயாவான். சிறந்த தனலாபம்
உடையவனே. இவனது ஆயுள் பலத்தை அறிந்து கிரக நிலைமை தெரிந்து நீ சொல்லுக. இவன்
வசியன் [தேவதை வசியன்] ஜாலக்காரன்.
இனி
பன்னிரண்டாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்தவன் வீண்விரயம் செய்பவன். ரசவாதம்
தேர்ந்தவன். குடும்ப நாசம் செய்பவன். ன் குருவான போகருடைய அருளாணையாலே நான்
கூறுவதை ஆராய்ந்தறிந்து நன்கு உணர்த்துக.
0 comments:
Post a Comment