குரு தரும் பாதகம்

Wednesday 22 October 2014
குரு தரும் பாதகம்


கேளப்பா யெட்டுக்கு வேசிகள்ளன்

கெடுதியுள்ள மனைவிபகை நோயால் கண்டம்

ஆளப்பா அரசர்பகை பொருளுஞ்சேதம்

அப்பனே அவமானம் கொள்வண்டம்பன்

தாளப்பா ஆறுக்கு தோஷமுண்டு

தார்வேந்தர் பகையுமுண்டு ரோகமுண்டு

கூறப்பா ஈராறில் எங்கோனாட்சி

குற்றமில்லை சென்மனுக்கு யோகங்கூறே

இனி எட்டாம் இடத்தில் குருபகவான் வீற்றிருப்பின் அவன், வேசி கள்ளனாகவும், தீய மனைவியால் பகைகொண்டவனாகவும், அவளாலும், பகையாலும் கண்டம் அடைபவனாகவும், அரசரது பகை பெற்றவனாகவும், பொருட் சேதம் அடைபவனாகவும், நிறைந்த அவமானம் அடைபவனாகவும், பெரிய டம்பனாகவும் இருப்பன். மேலும் 6ஆம் இடத்தில் குரு நிற்பின் சாதகனுக்கு அதனாலும் தோடம் உண்டு. அரசரது பகைநேரும். நோய் உபாதை ஏற்படும். ஆயினும் பன்னிரண்டாம் இடத்தில் குரு நின்றால் அதுவே அவனது ஆட்சி வீடானதால் அதனால் எந்த ஒரு குற்றமும் சென்மனுக்கு இல்லையென்று நீ ஆய்ந்தறிந்து கூறுவாயாக.



0 comments:

Post a Comment