புலிப்பாணி ஜோதிடம்: 12ம் பாவம்

Saturday 11 October 2014
புலிப்பாணி ஜோதிடம்: 12ம் பாவம்



பத்தின்மேல் இரண்டாகும் பெயரைக்கேளு

பரதேச வுத்தியோகம் பணத்தின்சோர்வு

சத்தான பலியோக சயனம் தியாகம்

தர்மமொடு கர்மபலன் சவுக்கியமாக

வித்தான பலபுண்ணிய விவாதமோடு

விளைந்திடுமே தொழிலான பலதானங்கள்

கத்தாதே போகருட கருணையாலே

கரைந்திட்டேன் புலிப்பாணி கருத்தைத்தானே.

பன்னிரண்டாம் பாவகத்தின் பலன்களாவன: பிறதேச செளக்கியம், உத்தியோகம், பணத்தால் ஏற்படும் சோர்வு பலயோகங்கள் வாய்த்தலும் சயன சுகம், தியாகம், தர்மம் ஆகியவற்றோடு கர்மபலனும் மற்றும் சுகமடைதலும், பல புண்ணிய சம்பந்தமும் விவாதத்தில் வல்லமையும் ஏற்படக் கூடிய தொழில்களும் பற்பல தானங்களும் வாய்த்தலை உணர்ந்து கூறினால் நன்மை பயக்கும் எனக் குருவருள் கொண்டு புலிப்பாணி கூறினேன். 




0 comments:

Post a Comment