குரு தரும் யோகம்

Wednesday 22 October 2014
குரு தரும் யோகம்


பாரப்பா பரகுரு நாலேழ்பத்து

பகருகின்ற கோணமுடன் தனமும்லாபம்

சீரப்பா சென்மனுக்கு யோகம் செப்பு

செந்திருமால் தேவியுமே பதியில்வாழ்வன்

கூறப்பா குடிநாதன் கண்ணுற்றாலும்

குவலயத்தில் வெகுபேரை ஆதரிப்பன்

ஆரப்பா ஆரெட்டு பன்னிரெண்டு

அறைகின்றேன் அதன்பலனை அன்பால்கேளே

வியாழ பகவான் என விளம்பப்படும் குருபகவான் 4,7,10 மற்றும் 1,5,9 இன்னும் 2,11 ஆகிய இடங்களில் இருந்தால் இச்சாதகனுக்கு யோகம் மிகவும் உண்டென்று கூறுவாயாக! செந்திருமால் தன் தேவியுடன் இவன் மனையில் வாழ்வார்கள். இன்னும் இரண்டாமிடத்ததிபதி இவனைக் காணில் இப்பூமியில் வெகு பேரை ஆதரிப்பான். இனி 6,8,12 ஆகிய இடங்களில் நின்றால் எத்தகைய பலன் விளைவிப்பான் என்பதனையும் கூறுகிறேன். இதனை நீயும் அன்புடனே கேட்பாயாக!

0 comments:

Post a Comment