சூரியன் தரும் யோகம்

Tuesday 21 October 2014
சூரியன் தரும் யோகம்


பாரப்பா மூன்றாறு பத்துஒன்று
பகருகின்ற பன்னொன்றில் வெய்யோன்நிற்கில்

சீரப்பா சீலனுட மனையில் தானும்
சிவசிவா தெய்வங்கள் காத்திருக்கும்

வாரப்பா வாகனமும் ஞானம்புத்தி
வளமான புத்திரர்கள் அரசர்நேசம்

கூறப்பா புரிவனடா சத்துருங்கன்
கொற்றவனே மூர்க்கனென்று கூறுவீரே.

இலக்கினத்திற்கு 3,6,10,11` ஆகிய இடங்களில் பதுமன் என்றும் இனன் என்றும் பரிதி என்றும் கூறப்படும் சூரியன் தேறி நின்றால் அச்சாதகனுடைய மனையில் சிவ பரம்பொருளின் பெருங்கருணையால் தெய்வங்கள் காத்து நிற்கும், அச்செல்வனுக்கு நல்ல வாகன யோகமும், நல்ஞானமும், விசேடமானா புத்தியும், வளமை தரும் புதல்வர்களும் அரசர்களுடைய ஆதரவும் அன்பும் ஏற்படும் என்றும், பகைவரை அழித்தொழிக்கும் வீரனாக அமைந்து மூர்க்கனாக விளங்குவான் என்றும் கூறுவாயாக. 



0 comments:

Post a Comment