ருது: மாதபலன்

Thursday 30 October 2014
ருது: மாதபலன்


நமது புராதான ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லாத விஷயங்களே இல்லை,அதுபோல இல்லாத விஷயங்களே இல்லை. நமது அன்றாட நிகழ்வுகளை கூட முறைப்படி எப்படி செய்யவேண்டும் என சொல்லி சென்றுள்ளனர். அதில் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் பூப்படைதல்(ருது) பற்றியும், பூப்படைதல் நிகழ்ந்த நேரம் கொண்டு அதற்கான பலாபலன்களையும் கூறியிருக்கின்றனர்.

சித்திரை மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் அது புருசனுக்கு ஆகாது. இம்மாதத்தில் ருது ஆன பெண் பரிகாரம் செய்துகொள்வது மிக அவசியம்.

வைகாசி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் சுகமாயிருப்பள். இம்மாதத்தில் ருது ஆன பெண்ணிற்க்கு அனைத்துவித நன்மைகளும் கிட்டும்.

ஆனி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் புத்திர சம்பத்தாயிருப்பாள். அதாவது புத்திரவிருத்தி பெற்று சுகமாக வாழ்வாள்.

ஆடி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் அவள் பல புருஷரையிச்சிப்பாள். அதாவது பல ஆடவரை கூடுவாள். இவர்களும் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

ஆவணி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் நல்ல குழந்தைகளைப் பெறுவாள்.

புரட்டாசி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் விருத்திபுத்தியுடையவள். அதாவது புத்திக்கூர்மை , கீர்த்தி உடையவள்.

ஐப்பசி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் புத்திரருண்டாகி விதவையாவாள். அதாவது குழந்தைபேறுக்கு பின் கணவனை இழக்க நேரிடும். இவர்களும் பரிகாரம் செய்வது மிக அவசியம்.

கார்த்திகை மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் பலரையும் தூஷிப்பாள். இவர்களும் பரிகாரம் செய்வது அவசியம்.

மார்கழி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் நல்ல குழந்தைகளை பெறுவாள்.

தை மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் புண்ணியஞ் செய்பவளாயிருப்பாள்.

மாசி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் திரவியமுண்டாயிருப்பாள். அதாவது பொன்,பொருள் என அனைத்து சுகங்களையும் அனுபவிப்பாள்.

பங்குனி மாதத்தில் ஒரு பெண் ருதுவானால் வெகு குழந்தைகளை பெறுவாள். அதாவது அதிக குழந்தைகள் உண்டாகும் பாக்கியம் கிட்டும்.









0 comments:

Post a Comment