புலிப்பாணி ஜோதிடம்: 6ம் பாவம்
ஆறா மிடத்தின் னதுபலன் றானப்பா
ஆயுதத்தால்
ரணஞ்சொல்லு ஞாதிதுன்பம்
வீரான யுத்தமொடு திரவியநஷ்டம்
மிகுதிருடர்
ஜலமடந்தை விளையுஞ்சோர்வும்
கூறான மெய்வாதை பெண்ணால்கண்டம்
கூடுமேபெரும்பாலும்
நோயுமென்று
பேரான சிறைச்சாலை கிட்டுமென்று
பேசினேன் புலிப்பாணி பிரியத்தோட.
ஆறாம் இடத்தினால் அரியத்
தரும் பலன்களாவன: ஆயுதத்தால் ஏற்படும் அபாயம், தாயாதிகளால்
ஏற்படும் துன்பம், யுத்தபயம், திரவிய
நஷ்டம், திருடர்களால்
ஏற்படும் தொல்லை, ஜலகண்டம், பெண்களால்
ஏற்படும் துன்பங்கள், செய்வினைகளால்
சோர்வுறுதல், உடலுபாதை, பெண்ணால்
ஏற்படும் கண்டம் நோய்கள் மற்றும் சிறை வயப்படும் தொல்லைகள் ஏற்படுமென் பிரியமாக
புலிப்பாணி குருவருளாலே கூறினேன்.
0 comments:
Post a Comment