புலிப்பாணி ஜோதிடம்: 6ம் பாவம்

Wednesday 8 October 2014
புலிப்பாணி ஜோதிடம்: 6ம் பாவம்



ஆறா மிடத்தின் னதுபலன் றானப்பா

ஆயுதத்தால் ரணஞ்சொல்லு ஞாதிதுன்பம்

வீரான யுத்தமொடு திரவியநஷ்டம்

மிகுதிருடர் ஜலமடந்தை விளையுஞ்சோர்வும்

கூறான மெய்வாதை பெண்ணால்கண்டம்

கூடுமேபெரும்பாலும் நோயுமென்று

பேரான சிறைச்சாலை கிட்டுமென்று

பேசினேன் புலிப்பாணி பிரியத்தோட.
ஆறாம் இடத்தினால் அரியத் தரும் பலன்களாவன: ஆயுதத்தால் ஏற்படும் அபாயம், தாயாதிகளால் ஏற்படும் துன்பம், யுத்தபயம், திரவிய நஷ்டம், திருடர்களால் ஏற்படும் தொல்லை, ஜலகண்டம், பெண்களால் ஏற்படும் துன்பங்கள், செய்வினைகளால் சோர்வுறுதல், உடலுபாதை, பெண்ணால் ஏற்படும் கண்டம் நோய்கள் மற்றும் சிறை வயப்படும் தொல்லைகள் ஏற்படுமென் பிரியமாக புலிப்பாணி குருவருளாலே கூறினேன்.




0 comments:

Post a Comment