ஊர் ஊராக சுற்றுபவர்

Thursday 30 October 2014
ஊர் ஊராக சுற்றுபவர் 


பாரப்பா பரமகுரு சனியும் பாம்பும்

பலமாக சரஉபய மமர்ந்து நிற்க

சீரப்பா சென்மனுமே ஊரைவிட்டு

சிவசிவா சிலகாலந் தேசஞ்செல்வன்

கூறப்பாகுடி நாதன் வலுத்திருக்க

கொற்றவனே குமரனுந்தான் குடியில்வந்து

வீரப்பா வெகுகாலம் வாசஞ்செய்வன்

விளம்பினேன் புலிப்பாணி விளம்பக்கேளே

போகமா முனிவரருள் பெற்ற புலிப்பாணி கூறும் இக்கருத்தையும் நன்கு ஓர்ந்து கவனிப்பாயாக! பிரசித்தமான பரம சுகமளிக்கும் குருபகவானும் சனியும் பாம்பும் பலமுள்ளவராக சரம், உபயம் அமர்ந்து நிற்க அச்சென்மன் சிவ பரம்பொருளின் பேரருளால் தன் இருப்பிடத்தை விட்டு தேசாந்தரம் செல்வான். நீ மிகவும் ஆராந்து கூறுவாயாக. இலக்னாதிபதி வலுத்திருந்தால் முருகப்பெருமானின் அருளால் அவன் அவனது குடியில் வந்து வெகுகாலம் வாசம் செய்வான் என்றும் உணர்த்துவாயாக.
 



0 comments:

Post a Comment