சூரியன் & சந்திரனுடன் சீறுகின்ற பாம்பு
பாரப்பா பதினைந்து நாளிலேயும்
பகருகின்ற பால்மதியும்
வெய்யோனைத்தான்
சீரப்பா சீறியே அரவந்தீண்டில்
செத்திடுவர்
போர்முகத்தில் அனந்தம்மன்னர்
ஊரப்பா ஊரெங்கும் பேதி அம்மை
உத்தமனே கவுமாரி
யாலேசீக்கு
பாரப்பா மன்னர்களு மடியாவிட்டால்
மகத்தான அன்னமது
அரிதாம், பாரே
|
இன்னொரு கருத்தையும் நன்கு கவனிப்பாயாக! வளருகின்ற கலையால் பதினைந்து நாள்களில்
உயர்வு பெறும் சந்திரனையும் மற்றும் சூரியனையும் (இராகு கேது ஆகிய) பாம்பு சீறித் தீண்டும்
சீர் பெறில் போர் முகத்தில் அனெகம் மன்னர் இறந்தொழிவர்; ஊரெங்கும் கொள்ளை நோயும், அம்மை
பேதி போன்ற தீய வியாதிகளும் கெளமாரியின் கருணையினால் உத்தமனே வந்து வாய்க்கும். அவ்வாறு
மன்னர்கள் மடியாவிடின் பெருமைக்குரிய அன்னமது கிடைப்பது அரிதாகிப் போகும்.
0 comments:
Post a Comment