புலிப்பாணி ஜோதிடம்: 5 & 6ல் மாந்தி

Monday 20 October 2014
புலிப்பாணி ஜோதிடம்: 5 & 6ல் மாந்தி



கூறினேன் கிரிஅய்ந்தில் முடவன்பிள்ளை

குணமாக வாழ்வனடா சேய்க்குதோஷம்

தேரினேன் வீரனடா சத்துருபங்கன்

திடமாக வாழ்வனடா தனமுள்ளோன்

ஆரினேன் அயன் விதியுமெத்தவுண்டு

அப்பனே அடுத்தோரைக் காக்கும் வீரன்

கூறினேன் குளியனுமே ஆறில் நிற்க

கொற்றவனே இப்பலனைக் கூறினேனே

இலக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் சனியின் குமாரனான குளிகனானவன் நிற்கப்பிறந்தவன் குணவானாக வாழ்வான் எனினும் புத்திர தோடம் உடையவனேயாவான். மிகச் சிறந்த வீரனாக இவன் விளங்குவதோடு பகையை ஒழித்தழிக்கும் பாங்கறிந்தவன்; திடமாக வாழ்பவன். வெகுதன தான்ய சம்பத்துடைவன்,

மேலும் இக்குளிகன் ஆறாமிடத்தில் நிற்கப் பிறந்தவன் நிறைந்த ஆயுள் உள்ளோன். பரோபகாரி, இவனும் வீரனே என்பதனை நன்கு கிரக பலம் அறிந்து கூறுவாயாக. 




0 comments:

Post a Comment