புலிப்பாணி ஜோதிடம்: 5 & 6ல் மாந்தி
கூறினேன் கிரிஅய்ந்தில் முடவன்பிள்ளை
குணமாக வாழ்வனடா
சேய்க்குதோஷம்
தேரினேன் வீரனடா சத்துருபங்கன்
திடமாக வாழ்வனடா
தனமுள்ளோன்
ஆரினேன் அயன் விதியுமெத்தவுண்டு
அப்பனே அடுத்தோரைக்
காக்கும் வீரன்
கூறினேன் குளியனுமே ஆறில் நிற்க
கொற்றவனே இப்பலனைக்
கூறினேனே
|
இலக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் சனியின் குமாரனான
குளிகனானவன் நிற்கப்பிறந்தவன் குணவானாக வாழ்வான் எனினும் புத்திர தோடம்
உடையவனேயாவான். மிகச் சிறந்த வீரனாக இவன் விளங்குவதோடு பகையை ஒழித்தழிக்கும்
பாங்கறிந்தவன்; திடமாக வாழ்பவன். வெகுதன தான்ய சம்பத்துடைவன்,
மேலும்
இக்குளிகன் ஆறாமிடத்தில் நிற்கப் பிறந்தவன் நிறைந்த ஆயுள் உள்ளோன். பரோபகாரி,
இவனும் வீரனே என்பதனை நன்கு கிரக பலம் அறிந்து கூறுவாயாக.
0 comments:
Post a Comment