உலக மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் அதில் எத்துனை பேர் தாங்கள் நினைத்தபடி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றனர், தம்முடைய எண்ணங்கள் செயலாக மாறி வாழ்க்கை சந்தோஷமாக வாழ்கின்றனர் என்று கேட்டால் அது கேள்விக்குறியே !.
ஒருவருக்கு சரியான வயதில் திருமணம் , வேலை , பிள்ளைபேறு என சகலமும் தங்குதடையின்றி நடந்துவிட்டாலே அவர் யோகக்காரர்தான். சகலமும் நல்லதாக நடக்க லக்ன அதிபதி நல்ல நிலையில் இருக்கவேண்டும், கொடுப்பவர் கொடுத்தாலும் அதை அனுபவிக்க நமக்கு நடக்கும் திசை நல்லதாக இருக்கவேண்டும் .
என்னதான் நல்ல திசையாக இருந்தபோதிலும் லக்ன அதிபர் பலமின்றி இருந்தால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதைதான் . அதுபோல லக்னத்தில் லக்ன சுபர் இருந்து அதை சுப கிரகங்கள் பார்த்தால் அவர் மிகுந்த யோகக்காரரே.
0 comments:
Post a Comment