அடிப்படை பாடம்:4

Friday 30 May 2014
                                                                பஞ்சாங்கம் 
 
                      பஞ்ஞாங்கம் என்பது 5 அங்கங்கள் கொண்டது.

1.திதி
2.வாரம்
3.நட்சத்திரம்
4.கரணம்
5.யோகம்

1.திதி

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்.


எண் கிருஷ்ண பட்சம் சுக்கில பட்சம் தெய்வம் மற்றும் செய்ய வேண்டியவை!
1 பிரதமை பிரதமை முதல் சந்திர நாள் முக்கிய தெய்வம் அக்னி ஆகும். பூஜைகள் மற்றும் மங்கள காரியங்கள் செய்ய உகந்த நாள்.
2 துவிதியை துவிதியை இது ப்ரம்மாவுக்கு உரிய நாள் இன்று கட்டிடம் கட்டுவதர்கான அஸ்திவாரம் அமைத்தல் மற்றும் நிலைத்தன்மை கொண்டவை உருவாக்குதல் நன்மைதரும்.
3 திருதியை திருதியை கெளரிமாதாவுக்கு உகந்த நாள்.சிகை திருத்தம் செய்தல்,முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்ைம தரும்.
4 சதுர்த்தி சதுர்த்தி நான்காம் நாள் எமன் மற்றும் வினாயகருக்குரிய நாள். எதிரிகளை வீள்த்துதல்,தடை தகர்தல் முதலிய போர் காரியங்கள் வெற்றி தரும்.
5 பஞ்சமி பஞ்சமி இது நாகதேவனின் நாள்,விஷம் முரித்தல்,மருத்துவம் செய்தல் அறுவை சிகிச்சை முதலியன பலன் தரும்.
6 சஷ்டி சஷ்டி நாளின் தெய்வம் முருகன்.புதிய நண்பர்களை சந்தித்தல்,கொண்டாட்டம் கேளிக்கை முதலியன சிறப்பு.
7 சப்தமி சப்தமி சூரியனின் நாள்.பிரயாணம் தொடங்குதல்,பிரயாண படி கேட்டல், முதலிய நகர்தல் சம்மநதமான காரியங்கள் கைகூடும்.
8 அஷ்டமி அஷ்டமி இன்னாளின் கடவுள் மஹாருத்ரன் ஆவார்.ஆயுதம் எடுத்தல்,அரன் அமைத்தல்,போர் மற்றும் தற்காப்பு கலை கற்றல் ஆகியவை உகநதது
9 நவமி நவமி அம்பிகையின் நாள்.எதிரிகளை கொல்லுதல்,வினாசம் செய்தல்.
10 தசமி தசமி தர்மராஜாவின் நாள்.மதவிழாக்கள்,ஆன்மீக செயல்கள் நன்மை தரும்.
11 ஏகாதசி ஏகாதசி மஹாருத்ரனின் நாள். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் பரமாத்வாவை தியனிதல் சிறப்பு.
12 துவாதசி துவாதசி மஹாவிஷ்ணுவின் ஆதிக்கமுடய நாள்.விளக்கு ஏற்றுதல், மதவிளாக்கள், பணிகள் செய்தல்.
13 திரயோதசி திரயோதசி மன்மதனின் நாள்.அன்பு செலுதுதல்,நட்பு வளர்தல்.
14 சதுர்த்தசி சதுர்த்தசி காளியின் ஆதிக்கமுடய நாள்.விஷத்தை கைய்யாளுதல்,தேவதைகளை அைழத்தல்.
15 அமாவாசை பௌர்ணமி அமாவாசை பித்ருகளுக்கு காரியங்கள் செய்யவும்.பௌர்ணமி அன்று அக்னிக்கு ஆஹுதி கொடுத்தல் முதலியன நலம் தரும்.



வளர்பிறைத் திதிகள்

அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான  பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். 








அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருக்கும்.

அமாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12° தூரம் விலகி இருக்கும். அந்நாள் பிரதமை எனப்படும். அதற்கு மறுநாள் மேலும் ஒரு 12° விலகியிருக்கும். அந்நாள் துதியை எனப்படும். மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி.
சந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்பார்கள்.

தேய்பிறைத் திதிகள்

அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.
இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும்.
இவைகள் அனைத்தும் சோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அட்டமி, நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர்.

2.கிழமை (அல்லது வாரம்)

கிழமை (அல்லது வாரம்) என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கால அளவு. கிழமை என்றால் உரிமை என்று பொருள். இந்த ஏழு நாட்களும் வானத்தில் தெரியும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஏழு ஒளிதரும் பொருட்களுக்கு உரிய (கிழமை உடைய) நாளாக பன்னெடுங்காலமாக அறியப்படுகின்றது. இந்த ஏழு பெயர்களும் சுழற்சி முறையில் திரும்பத் திரும்ப வருகின்றன. ஞாயிறு என்பது சூரியனின் பெயர்களில் ஒன்று . இது ஒரு நாள்மீன். எனவே ஞாயிற்றுக்கிழமை கதிரவனுக்கு உரிய நாளாகக் கொள்ளப்படுகின்றது. திங்கள் என்பது நிலாவின் பெயர்களில் ஒன்று[. திங்கட்கிழமை நிலாவுக்கு உரிய நாள். இப்படியாக மற்ற நாட்களும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்னும் ஐந்தும் கதிரவனைச் சுற்றி வரும் கோள்மீன்களுக்கு உரிய நாட்களாக அமைந்துள்ளன.
மேற்கத்திய காலக் கணிப்பு முறைகளிலும், இந்திய முறைகளிலும் கிழமை என்னும் இந்தக் கால அலகு இடம் பெற்றுள்ளது. பொதுவாக பிறமொழிகளிலும் கிழமையில் அடங்கும் நாட்களின் பெயர்கள் சூரியன், சந்திரன் மற்றும் ஐந்து கோள்களின் பெயர்களைத் தாங்கியுள்ளன.

 

தமிழில் நாட்களின் பெயர்களும் அவை குறிக்கும் கோள்களின் பெயர்களும் கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

  1. ஞாயிற்றுக் கிழமை : சூரியன் (தமிழில் ஞாயிறு)
  2. திங்கட் கிழமை : சந்திரன் (தமிழில் திங்கள்)
  3. செவ்வாய்க் கிழமை : செவ்வாய்
  4. புதன் கிழமை : புதன்
  5. வியாழக் கிழமை : வியாழன்
  6. வெள்ளிக்கிழமை : வெள்ளி
  7. சனிக் கிழமை : சனி


 

2 comments:

  1. அருமையான படைப்பு .....

  1. Anonymous said...:

    good

Post a Comment