செவ்வாய் தரும் பாதகம்

Wednesday, 22 October 2014
செவ்வாய் தரும் பாதகம்


சொல்லப்பா ஆறெட்டு பன்னிரண்டும்

சுகசப்த கேந்திரமும் பாக்கியம் ரெண்டில்

அல்லப்பா அத்தலத்தில் ஆரல்நிற்க

அப்பனே அகம் பொருளும் நிலமும் நஷ்டம்

குள்ளப்பா குடும்பமது சிதறிப்போகும்

கொற்றவனே குருவுக்கு தோஷமுண்டாம்

வல்லப்பா போகருட கடாக்ஷத்தாலே

வளமாகப் புலிப்பாணி வசனித்தேனே.

இன்னுமொன்றும் சொல்லுகிறேன் கேட்பாயாக. இச் செவ்வாய், சேய், பவுமன் என்றும் உரைக்கப்படுபவன். இவன் 6,8,12,3,7,10,9-இல் நிற்க நிலமும் பொருளும் மனையும் சேதமாகும்; குடும்பமானது சிதறிப்போகும் இதனைச் செவ்வாய் [குரு] தோடம் என்றும் கூறுவார்கள் வல்லவராகிய என் சற்குரு போக மாமுனிவரின் கருணையாலே வன்மையுடன் புலிப்பாணி முனிவராகிய நான் கூறினேன். 



0 comments:

Post a Comment