முன் எச்சரிக்கை!!!

Monday, 1 September 2014
முன் எச்சரிக்கை



ஜோதிடம் தெரிந்துகொள்வதற்க்கு முன்,இது அவசியம்.

இந்த எச்சரிக்கை யாருக்கு?. நம் அனைவருக்கும் தான். ஜாதகம் தான் அனைத்திற்க்கும் பிராதனம் என உங்களுக்கு தெரியும். ஜாதகப்படி அதாவது நவகிரகங்கள் படி நாம் எல்ல கஷ்ட நஷ்டங்களையும் அனுபவிக்கிறோம். அந்த கஷ்டத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவே ஜோதிடம் நமக்கு பெரும்பாலும் உதவுகின்றது.

எப்பொழுதும் நாம் நன்றாக இருக்கும்பொழுது ஜோதிடம் பார்க்க செல்வதில்லை. பிரட்சனைகள் ,கஷ்டம் என ஒவ்வொன்றாக தலைதூக்க ஆரம்பித்தவுடனே தான் ,நேரம் நல்லா இருக்கா இல்லையா என பார்க்க ஜோதிடரிடம் செல்கிறோம்.

அப்படி நேரம் சரியில்லை எனில் சிறு சிறு பரிகாரம் மூலம் நாம் அதை சரி செய்துகொள்ளமுடியும். இது எதை உணர்த்துகிறது எனில் நமக்கு நேரம் சரியில்லை எனில் தகுந்த பரிகாரம் மூலம் அதை தடுத்து நிறுத்த முடியும். அதற்க்கு உதவுவது நம்முடைய ஜாதகம்.

எப்படி கஷ்ட காலத்தில் பரிகாரம் மூலம் நாம் நம்மை காத்துக்கொள்கிறோமோ, நமக்கு பாதகமாக அமைவதும் நமது ஜாதகமே. அது எப்படியெனில்,நமக்கு தெரிந்தவ்ர்,ஜோதிடர் என்று நம்பி, நமது ஜாதகத்தை அவரிடம் கொடுக்கிரோம்.

அவர் நல்லவர் எனில் எந்த பிரட்சனையும் இல்லை. அதுவே அவர் நம் முன்னே சிரித்து பேசுபவராகவும்,பின் நமக்கு பாதகம் விளைவிப்பவராகவும் இருந்தால்?. நம் ஜாதக குறிப்பு அவரிடம் உள்ளது அதை வைத்து அவரால் என்ன செய்யமுடியும் என்று நினைக்காதீர்கள்.

உங்களுக்கு கெட்ட நேரம் வரும்போது பரிகாரம் எப்படி உங்களை காக்கிறதோ,அதுபோல உங்கள் நல்ல கெட்ட நேரத்தை முறையே அறிந்து உங்கள் குலதெய்வத்தை கட்டு கட்டி,உங்களை அகல பாதாலத்திற்க்கும் தள்ள முடியும்.

தெரிந்தவர்கள் என்று நம்பி தங்கள் குலதெய்வத்தையோ,ஜாதக விஷயங்களையோ சொல்லி தெரிந்தே மாட்டிக்கொள்ளார்கள்.இதில் பாதிக்கப்பட்ட அனுபவம் என்க்கும் உண்டு.


குருவே சரணம்..

1 comments:

Post a Comment